ஒருவனின்; பக்கத்துள் ஓர் எழுபது கோடி தெவ் உறும் - அரசனுக்குப் பக்கமாகவே எழுபது கோடிப் பகைவர் அமைவர்.
புறப்பகைவர் பலராயினும் அவருக்குத் தப்பமுடியும். அகப்பகைவராயின், அவருள்ளும் சூழ்ச்சித் துணையாயிருக்கும் அமைச்சனே வீழ்ச்சித் துணையாயிருப்பின், ஒருவனே யாயினும் தப்ப முடியாதாம். ஆதலால் 'பக்கத்துள் தெவ் எழுபது கோடியுறும்' என்றார். ஏழு என்பது நிறைவான எண்ணும் கோடி என்பது பேரெண்ணுமாதலால், எழுபது கோடி யென்றது உண்மையில் அதனினும் மிகப் பெரிய தொகையே. அதனால் அழிவிற்குத் தப்ப முடியாது என்னும் உண்மையைக் குறித்தார். அமைச்சன் என்றும் அரசனுக்குப் பக்கமாகவே யிருப்பவனாதலாலும், பழுதெண்ணும் மந்திரியால் வருங் கேட்டிற்குத் தப்பமுடியா தென்பதையே ஆசிரியர் வலியுறுத்த விரும்புவதாலும், 'பக்கத்துள் தெவ்' என்றே குறளிற் சொற்றொடர் நிற்றலா லும், 'பக்கத்துள்' என்னுஞ் சொல் 'தெவ்' என்பதையே தழுவுவதாம். பகைவர் மாபெருந் தொகையராயினும், சே-மையில் நிற்பவரினும் அண்மையில் நிற்பவரால் அழிவு உறுதியாதலை எண்ணிக் காண்க. இதனால், அரசன் விழிப்பாயிருந்து ஒற்றர் வாயிலாக உண்மையறிந்து, ஐயுறவிற் கிடமான அமைச்சனை உடனே விலக்கவேண்டு மென்பது கூறப்பட்டது.
'எழுபது கோடியுறும்' என்பதற்கு எழுபது கோடிமடங்கு நல்லரென் றுரைப்பது பொருந்தாது. இனி, "எழுபது கோடி தலை" என்றும், "எழுபது கூறுதலை" என்றும், பண்டை யுரையாசிரியன்மார் கொண்ட பாடமும் பொருந்து வனவாகா.
640.முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செ-வர்
திறப்பா டிலாஅ தவர்.
(இ-ரை.) திறப்பாடு இலாதவர் - வினையைச் செ-து முடிக்கும் திறமை யில்லாதவர்; முறைப்படச் சூழ்ந்தும் – செ-யவேண்டிய வினைகளை ஒழுங்குபட எண்ணிவைத்தும்; முடிவிலவே செ-வர் – செ-யுங்கால் முற்றுப் பெறாதனவாகவே விடுவர்.
திறப்பாடாவது, வந்த இடையூற்றை உடனுடன் விலக்குதலும் ஆள் வினையில் உறுதியாயிருத்தலுமாம். 'இலாஅ' இசைநிறை யளபெடை. திறப் பாடிலாதவர் பழுதெண்ணுவாரைப்போல் தண்டனைக் குரியவரல்லரேனும் விலக்கப்படவேண்டியவரே என்பது கருத்தாம்.