158
திருக்குறள்
தமிழ் மரபுரை
பேரரசராயினும் கள்ளுண்டு வெறித்தவிடத்துச் சிறுபிள்ளையாலும் எளிதா-க் கொல்லப்படுவராதலாலும், அந் நிலைமையடையுமாறு எவ்வேளை யிலும் உட்பகைவராற் கள்ளூட்டப்படுவ ராதலாலும், எஞ்ஞான்றும் 'உட்கப்படார்' என்றும், ஒழுக்கக்கேடும் மானக்கேடும்பற்றி இகழப்படுவ ராதலால் 'ஒளியிழப்பர்' என்றும் கூறினார். 'படாஅர்' இசைநிறை யளபெடை.
922. உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா னெண்ணப் படவேண்டா தார்.
(இ-ரை.) கள்ளை உண்ணற்க உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் கள்ளை உண்ணாதிருக்க; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க அங்ஙனமன்றி உண்ணவே விரும்பின், அறிவுடையோரால் மக்களாகக் கருதப்படுதலை விரும்பாதவர் உண்க.
-
ஆறறிவிற்குரிய மக்கட்பிறப்பையும் அதனாற் பெறக்கூடிய கல்வி யறிவையும் பெற்றும், கட்குடியால் அவற்றை யிழந்துவிடுதலால், இயற்கை யாகவே அவையில்லாத அஃறிணையினுங் கீழாகிப் பொதுவான உயிரினத்திலும் சேர்க்கப்படார் என்னும் கருத்துத் தோன்ற எண்ணப்பட வேண்டா தார்' என்றார்.
923.
ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
(இ-ரை.) ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது
-
மக்கள் எக்குற்றஞ்
-யினும் பொறுத்துக்கொள்ளும் மட்டற்ற அன்புள்ள தா- முன்பும் கள்ளுண்டு வெறித்தல் துன்பந் தருவதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என் - பின்பு எக்குற்றமும் பொறாத அறிவுடையோர்முன் அது எத்தகையதாம்?
ஐம்புலனு மடங்கி அடியோடு உணர்விழத்தலும், வா-காவது மறை வெளிப்படுத்தலும், பித்தர்போற் பிதற்றலும், ஆடை விலகலும், அற்றம் மறையாமையும், தீநாற்றம் வீசுதலும், வா- நுரைதள்ளுதலும், வழியிற் கிடத்தலும், வழிப்போக்கர் பழித்தலும், ஈ மொ-த்தலும், இளஞ்சிறார் சிரித் தலும் கண்ணாரக் காணின், பெற்ற தாயும் பொறாது கண்டனஞ் செ-வ ளாதலின், கள்ளைக் கண்ணாலுங் காணப் பொறாது நெடுந்தொலைவில் நீங்கும் தூயவொழுக்கமுள்ள சான்றோர்க்கு, அக் காட்சி அளவிறந்த அருவருப்பையும் வெறுப்பையும் விளைக்கும் என்பதைச் சொல்ல