-
பொருட்பால் - உறுப்பியல் (குடி) பெருமை
66
195
பெருமையுடைய ராயினார் தாம் வறியராய வழியும் பிறராற் செயற்கரியவாய தஞ்செயல்களை விடாது அவை செ-யு நெறியாற் கடை போகச் செ-தலை வல்லராவர்.
66
"வறியராய வழியு மென்பது முன்பு செ-து போந்தமை தோன்றப் ‘பெருமையுடையவ’ ரென்றதனாலும், 'ஆற்றுவா' ரென்றதனானும் பெற்றாம்" என்பது பரிமேலழகருரை. இக் குறளாற் பெருமையின் வெளிப்பாடு கூறப்பட்டது. 976. சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னு நோக்கு.
(இ-ரை.) பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - கல்வி யறிவாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்று வோம் என்னும் குறிக்கோள்; சிறியார் உணர்ச்சியுள் இல்லை -அந் நால் வகையிலும் சிறியவராயிருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை.
இம் மனப்பான்மை அறியாமை, செருக்கு, தன்னலம் ஆகியவற்றால் உண்டாவது. மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றா திருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.
977.
இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான் சீரல் லவர்கட்படின்.
இ-ரை.) சிறப்பும் தான் பெருமையைத் தரும் செல்வம், கல்வி, அதிகாரம், அதிநுட்பம் முதலியவற்றின் மிகுதிதானும்; சீர் அல்லவர் கண்படின் தன்னைக் கொண்டிருத்தற்குத் தகுதியில்லாத சிறியோரிடம் சேரின்; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செ-யும் இயல்பினதாம்.
"உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை
அடக்கமி லுள்ளத்த னாகி - நடக்கையின்
ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்.”
இவ் விருகுறளாலும் சிறியோ ரியல்பு கூறப்பட்டது.
(பழ.255)