உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

திருக்குறள்

தமிழ் மரபுரை





பொருட்டொடர்புபடாம லுரைப்பாரு முளர்" என்னும் பரிமேலழகர் மறுப்புரை மிகப் பொருத்தமானதே. துனி - வெறுப்பு; அதனை விளைத் தலால் வறுமை துனியெனப்பட்டது, முனியத்தக்க தாழ்வு முனிவு எனப் பட்டது போன்று (புறம். 192). இந் நான்கு குறளாலும் பயனில் செல்வத்தின் குற்றங் கூறப்பட்டது.

அதி. 102 - நாணுடைமை

அதாவது, உயர்குடிப் பிறந்து மானம் பெருமை சால்பு பண்பு ஆகிய குணங்களையுடையோர் தமக்குப் பொருந்தாத கருமங்களைச் செ-ய நாணுந்தன்மை. அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

1011. கருமத்தா னாணுத னாணுத் திருநுத னல்லவர் நாணுப் பிற.

(இ-ரை.) நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது தீய வினைகள் செ-ய வெட்கிப் பின்வாங்குதல்; பிற திருநுதல் நல்லவர் நாணு அஃதன்றித் தனித்து வெளிச் செல்லுதல், அறியாதவரும் முறைகாரருமான ஆடவரொடு உரையாடல், ஆடவருள்ள அவையிற் பேசுதல் முதலிய பிறவற்றிற்கு வெட்கப்படுதலும் கூச்சப்படுதலும் அழகிய நெற்றியை யுடைய குலமகளிர்க்கே யுரிய நாண்களாம்.

'திருநுதல் நல்லவர்' என்பது பாராட்டுப்பற்றிய புகழ்ச்சிச் சொல். 'பிற திருநுதல் நல்லவர் நாணு' என்பதனால் ஏனையது நன்மக்கள் நாண் என்பதும், ‘நாணுதல்' என்றதனால் கருமத்தின் இழிவும் பெறப்பட்டன. நாணும் வினைப்பன்மைபற்றிப் 'பிற' என்றார். இக் குறளின் பிற்பகுதிக்கு, “அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோடு ஒக்கும் என்றவாறு.” என்றுரைத்தார் மணக்குடவர். "இனி அற்ற மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோ டொக்குமென் றுரைப்பாரு முளர். அவர்க்கு நாண் கேடு பயக்குமென விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்படாமையானும், அஃதுரையன்மை அறிக" என்று பரிமே லழகர் கூறியிருப்பது சரியே. இதனால் நாணின் இலக்கணங் கூறப்பட்டது.

1012. ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.

(இ-ரை.)

ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - உணவும் உடையும் அவை யொழிந்த பிறவும் மக்களுயிர்க்கெல்லாம்

-