உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

ளதைக் கீழ் வைத்துக் கீழிருந்ததை எடுத்துக் கொண்டு மேலெறிந்ததைப் எடுத்துக்கொண் பிடித்தல் வேண்டும். இவ்வாறே பன்னிருமுறை தொடர்ந்து தவறாது ஆடிவிடின், பழமாம். பன்னிருமுறைக்கும் கீழ்வருமாறு பாட்டுப் பாடப்படும்.

(1) ஒன்றாவது ஒன்றாங்காய்.

(2) இரண்டாவது இரத்தினக்கிளி (அல்லது ஈச்சங்காய்.)

(3) மூன்றாவது முத்துச்சரம்.

(4) நாலாவது நாற்காலி.

(5) அஞ்சாவது பஞ்சவர்ணம்.

(6) ஆறாவது பாலாறு. (7) ஏழாவது எழுத்தாணி. (8) எட்டாவது கொட்டாரம்.

(9) ஒன்பதாவது ஒலைப்பூ.

(10) பத்தாவது பனங்கொட்டை.

(11)

பதினொன்றாவது தென்னம் பிள்ளை.

(12) தென்னைமரத் தடியிலே தேரோடும் பிள்ளையார்.

ஒருத்தி ஆடும்போது தவறிவிடின், அடுத்தவள் ஆடல்

வேண்டும். ஆடினவள் மறுமுறையாடும்போது,

முதலிலிருந்தே ஆடல் வேண்டும்.

II. ஐந்தாங்கல் (ஒருவகை)

மீண்டும்

ஆட்டின் பெயர் : ஐந்து கற்களைக்கொண்டு ஆடும் ஆட்டு ஐந்தாங்கல்.

ஆடுமுறை

முந்தியாடுபவள், இந்த ஆட்டிற்குரிய ஐந்து கற்களையும் ஒருங்கே சிதறி, அவற்றுள் ஒன்றை

எடுத்து மேலே போட்டுக், கீழிருப்பவற்றுள் ஒன்றையெடுத்துக் கொண்டு பிடித்தல்வேண்டும். பின்பு, கையிலிருப்பவற்றுள் ஒவ்வொ வொன்றை மேலே போட்டுப்போட்டு, ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றை யெடுத்துக்கொண்டு பிடித்தல் வேண்டும்.