உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

செந்தமிழ்க் காஞ்சி

23

தலைவி தோழிக்குச் சொல்லியது 'வெள்ளிப்பிடி யறுவாள்' என்ற மெட்டு

ஆரபி ஒற்றை

மானிடருந் திரளாக மாணவக ரொடேகூடக் கானமிளை யவர்பாடக் கல்விமானுங் காணாவாறே பானுவொரு புயன்மேலே பாய்ந்துவரல் போலே சாலேம் மாநகரி லொருபவனி மன்னன்வரக் கண்டேன் நானே.

வாகைபெற வயவீரர் வாளெனவே ஓலை வீசி ஓகையுடன் இளையோரும் ஓசன்னா ஓசன்னா வென சாகைதழை பலபேர்கள் சாலையிடச் சாலேம் நகர் மாகழுதை மிசையேறி மன்னன்வரக் கண்டேன் நானே.

காவலரார் இவரென்று கண்டவரே கேட்டயர தேவதிரு வரரான தேசிகன் கிறித்தே சென்றார் தாவிதுகு மரனாகத் தங்கமேனி பொங்கவொளி

மாவலமை யொடுவீதி மன்னன்வரக் கண்டேன் நானே.

ஓலைகரம் பிடித்துயர்த்தி ஓசன்னா ஓசன்னாவென்று பாலகரும் பலமாகப் பண்ணகரம் பாடிவரச் சேலைகிளை பாவுவழிச் சென்றனரே தேவாலயம் மாலெனக்குள் வளர்ந்தேற மன்னன்வரக் கண்டேன் நானே.

காசுபுறா வாணிகரைக் கண்டுசினங் கொண்டேயவர் ஆசனத்தைக் கவிழ்த்தோடி ஆச்சரியமா யடித்தார் ஓசன்னா வோசன்னா வென்றேஓயாச் சிறுவர் பாட மாசனத்தின் நடுவாக மன்னன்வரக் கண்டேன் நானே.