உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

மொழிநூலே யறியாதார் முற்றும் – சொல்லும் முறையற்ற சொற்களுக் குரையுண்டோ சற்றும்.

-

இயற்கையாம் தென்மொழித் தன்மை - மிகச் செயற்கையாய்ச் செய்ததே ஆரியத் தன்மை.

இந்திய மொழியெல்லாம் ஒன்றே - என்றால் இந்தியர்க் கூண்மண சம்பந்த முண்டே

அண்மை இந்திஎளி தென்றீர் - அந்த ஆங்கில ஒலிகளோ எளியன கண்டீர்.

செந்தமிழ்க் காஞ்சி

ஆங்கிலம் போலவே இந்தி ஒரு

ஆரியக் கிளைமொழி யானது சிந்தி.

உடன்பிறந் தார்க்கெல்லாம் அன்போ நம

துடன்பிறந் தேகொல்லும் நோயொடு நண்போ?

தமிழ்நாடோ ஒருசிறு பாகம்

என்று

தள்ளாதீர் பாரதத் தலையது வாகும்.

பலர்இந்தி பேசுவ தாலே - தமிழ்ச்

சிலர்அதைத் கற்றறிடுஞ் சிரமமுங் காலோ.

ஓநாயாட் டுக்குட்டி நியாயம் – அறி

வுள்ளவ ரெல்லாரும் தள்ளுவர் மாதோ.

ஆரியங் கலப்பதி னாலே

-

முற்றும்

அழிந்துபோம் தமிழ்இதை அறிவீர்இக் காலே.

தமிழென்றே ஒருமொழி யுண்டோ -

என்று

சந்தேகிக் குங்காலம் சமீபமா யுண்டே.

தமிழாஉன் மடிகட்டிக் கொண்டு – இன்று தற்காத்துக் கொள்உன்றன் தாய்மொழி நன்று.