14
மொழிநூலே யறியாதார் முற்றும் – சொல்லும் முறையற்ற சொற்களுக் குரையுண்டோ சற்றும்.
-
இயற்கையாம் தென்மொழித் தன்மை - மிகச் செயற்கையாய்ச் செய்ததே ஆரியத் தன்மை.
இந்திய மொழியெல்லாம் ஒன்றே - என்றால் இந்தியர்க் கூண்மண சம்பந்த முண்டே
அண்மை இந்திஎளி தென்றீர் - அந்த ஆங்கில ஒலிகளோ எளியன கண்டீர்.
செந்தமிழ்க் காஞ்சி
ஆங்கிலம் போலவே இந்தி ஒரு
—
ஆரியக் கிளைமொழி யானது சிந்தி.
உடன்பிறந் தார்க்கெல்லாம் அன்போ நம
துடன்பிறந் தேகொல்லும் நோயொடு நண்போ?
தமிழ்நாடோ ஒருசிறு பாகம்
என்று
தள்ளாதீர் பாரதத் தலையது வாகும்.
பலர்இந்தி பேசுவ தாலே - தமிழ்ச்
சிலர்அதைத் கற்றறிடுஞ் சிரமமுங் காலோ.
ஓநாயாட் டுக்குட்டி நியாயம் – அறி
வுள்ளவ ரெல்லாரும் தள்ளுவர் மாதோ.
ஆரியங் கலப்பதி னாலே
-
முற்றும்
அழிந்துபோம் தமிழ்இதை அறிவீர்இக் காலே.
தமிழென்றே ஒருமொழி யுண்டோ -
என்று
சந்தேகிக் குங்காலம் சமீபமா யுண்டே.
தமிழாஉன் மடிகட்டிக் கொண்டு – இன்று தற்காத்துக் கொள்உன்றன் தாய்மொழி நன்று.