இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செந்தமிழ்க் காஞ்சி
33
36. திருச்சி மதுரம் டாக்டர் குருமருந்துகளின் குணம் 'பாண்டியன் ஈன்ற மீனாட்சி' என்ற மெட்டு
பல்லவி
மதுரம் - டாக்டர் குருமருந்து - நோயாளி
யார்க்கும் திருவிருந்து - குணங்கள் வாய்க்குமதை யருந்து - நோயுடனே வழிச்செலும் பறந்து – மதுரம்
உரைப்பாட்டு
வையகத்தி லெத்தனையோ பேர் வைத்திய ரென்றுபேர் வைத்துக்கொண்டு வசதியாய் வாழ்ந்து வருகின்றார் மெய்யாக வைத்தியம் தெரிந்து வியாதியைப் போக்கும் சிலருள் மதுரமன்றோ.
பல்லவியெடுப்பு
திருச்சிக் குருமருத்துவமே - கொண்டினி நம்
உருவைத் திருத்துவமே
(மதுரம்)