உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசையரங்கு இன்னிசைக் கோவை

14. தமிழ்ப் புலவர்க்குப் பிழைப்பின்மை

படிக்காசுப் புலவர் புலம்பல்

‘மீளாத நரகினுக் காளாக்கும் குடியே' என்ற மெட்டு

ப.

பாழானதே என்வாழ்வு பண்ணாருந் தமிழே ஏழாங் கடையிலும்என் எண்ணம் நீர்க்குமிழே.

து.ப.

தாழாத பணியெனுந் தாளாண்மை யுழவே வாழாது கழிந்ததென் வாளாண்மை மழவே

உ. 1

செப்படி மயக்கமே செய்கலையும் - மிகச் சேணுயர் கழைக்கூத்துந் தெரிந்தோ மில்லை தப்பிய மகளிராய்ப் பிறந்தோ மில்லை - செல்வத் தையலார் குற்றவேலுஞ் செய்தோ மில்லை

2

49

(பாழா)

(பாழா)

முதிர்ந்த நல்லியக்கோடன் முனம்மறைந்தார்

மூவேந்த ரொடுவேளிர் முதுகுமணன்

கொடை

ஈவேந்தன் சீதக்காதி இரகுநாதன் பின்னே

இலவம் பஞ்சே தமிழ்ப்புலவ ரெல்லாம்

3

(பாழா)

பிள்ளைப் பாண்டியனொடு வில்லி யில்லை - பிழை பேணாத சாத்தனொடு கூத்த னில்லை

கள்ளத் தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை - இன்று

காட்டிக் கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை

(பாழா)