இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
74
4ஆம் பாடம் கப்பல் பாட்டு
செந்தமிழ்க் காஞ்சி
‘முத்திநெறி அறியாத' என்ற மெட்டு
1. கப்பலைப் பார்! கப்பலைப் பார்!
கடலுள்ளே கப்பலைப் பார்!
தெப்பத்தேர் ஓட்டம்போல்
தெரிகின்ற கப்பலைப் பார்!
2. புத்தியுள்ள பெரியோர்கள்
புண்ணியமாய்ச் செய்த கப்பல் மெத்தை வீடு போலடுக்காய் மிகவினிதாய்க் காண்கிறதே!
3. பட்சிகளின் இறகுகள்போல் பலமாகப் பாய்களுமே உச்சியிலே உரத்தடிக்க
ஓடுகின்ற கப்பலைப் பார்!
4. விசிறுகன்ற காற்றாலோ?
வேறான சூழ்ச்சியாலோ?
பசியகடல் மேலாகப்
பாய்ந்தோடிப் போகிறதே.
5. அலைமேலே தொட்டில்போல்
ஆடியாடிப் போகிறதே
உலைமேலே புகைபோலே
உயரத்தான் புகைகிறதே
6. ஊஞ்சலிலே இருப்பதைப்போல்
உள்ளேபல பேர்இருக்க
நீஞ்சி நீஞ்சி நீர்மேலே
நெடுந்தூரம் போய்விட்டதே.