84
செந்தமிழ்க் காஞ்சி
1.
2.
13ஆம் பாடம்
பிச்சைக்காரன்
பிச்சைக்காரா! பிச்சைக்காரா! பெரும்பசியோ? உன்தனுக்கு இச்சிக்கும் உணவுகளை என்னிடம்சொல், இட்டிடுவேன்.
பேசக்கூட முடியவில்லை பெரிதும் தொண்டை கட்டினதோ? நேசத்துடன் மருந்திடுவார் நினைக்கில்லையா?
என்செய்வேன்
3. மூடஒரு துணியின்றி முன்பனியில் இரவிலே நீ நீடுவேளை நிலாவெளியில் நிற்கிறாயே! பாவம்! பாவம்!
4. நில்லாதே, கால்நோகும் நினக்கு ஒன்றும் பலமில்லை எல்லாம்என் அன்னையிடம் எடுத்துச்சொல்வேன் இங்கு
14ஆம் பாடம் கழுதைப் பாட்டு
உட்கார்
‘உந்தனைச் சும்மாவிடுவேனோ' என்ற மெட்டு - இங்கே வார்த்தைக்கு இசைந்தபடி நிறுத்திப் பாடவேண்டும்.
1. கழுதை! கழுதை! இப்போதே அழுதே அழுதே கத்தாதே.
2. காலைத் தட்டி நடக்கிறாயே பாலைக் குட்டி குடிக்கிறதே
3. மூக்குங் கரிபோல் கருப்பாகும் காக்கை முதுகில் இருப்பாகும்.
4. எட்டி எட்டி வாராதே
கட்டி எடுத்துப் போடுவேன்
5. கொழுக்கப் புல்லைத் தின்பாயே அழுக்குச் சுமையைச் சுமப்பாயே