உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் பாடல் திரட்டு

6.

உன்னைப் போலப் பொறுமையுடன்

ஊழியம் செய்வார் உலகினில் யார்? 7. வண்ணான் தேடி வருகிறான் அன்னை என்னைத் தேடுவாள்.

15ஆம் பாடம் நாய்

1.

'பாவஞ்செய்யாதிரு நெஞ்சே' என்ற மெட்டு நாய்ஒரு நல்ல பிராணி – அது

நன்றி மறவாத நாற்கால் பிராணி.

2. ஓநாய் நரிஅதன் இனமே - அது

பூனையைக் கண்டதும் பொங்கிடும் சினமே.

3.

நாக்கு நன்றாய் மெதுமாகும் – அது நக்கி நக்கி நீரைக் குடிப்பதற்காகும்.

4.

நெஞ்சு பெரிதாக இருக்கும் - அது நெடுந்தூரம் போகவே உதவியா யிருக்கும்.

5. வாலில் இருப்பது வளைவு - அது மட்டை வைத்துக் கட்டினாலும் மாறாது.

6. எசமானைக் கண்டால் வாலாட்டும்

அதன்

நிசமான மகிழ்ச்சியை நின்றாடிக் காட்டும்.

7.

ஊளை யிட்டுத் துயர்கூறும் அது உறுமி உறுமியே கோபத்தில் சீறும்.

8.

வீட்டைக் காக்கும் சிலநாய்கள் - அவை

9.

வேற்றாளைக் கண்டாலோ விரைந்துமேல் பாயும்.

வேட்டையும் சிலநாய்கள் பிடிக்கும் - அவை காட்டுப் பன்றிகளின் கன்னத்தில் கடிக்கும்.

10. நாயை வளர்ப்பது நன்று

அது

நம்பத்தக்க காவல்காரருள் ஒன்று.

85