உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

செந்தமிழ்க் காஞ்சி

16-ம் பாடம்

சேவல் பாட்டு

‘ஆண்டிப் பண்டாரம்' என்ற மெட்டு.

சேவல் கூவுதே - சின்னச்

சேவல் கூவுதே

1.

கொக் கொக் கோ வென்று

கூவுது விடிந்தது பார்!

இக்காலை நித்திரைவிட் டெழுந்திருங்கள்

என்று சொல்லி

(சேவல்)

2. காலையும் ஆய்விட்டது

கருத்தாக எல்லாரும்

வேலைக்குப் போய்விடுங்கள்

வேளைஇதே என்றுசொல்லி

(சேவல்)

3. படபட வென்றொலிக்கப்

பக்கத்தில் சிறகடித்து

கடவுளைக் கோ! கோ! என்று

கழுத்தை நீட்டி மேல்பார்த்து

(சேவல்)

4. கனமாகத் தூங்குவாரைக் கைதட்டி எழுப்புதல்போல் மனமாகச் சிறகுகளை

மறுபடியும் அடித்தடித்து

(சேவல்)

5.

காலிலே சலங்கைகட்டி

கன்னத்தில் முத்தமிட்டு

வாலை வளைத்து நாமும்

வளர்த்துவந்த அழகான

(சேவல்)