இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
88
18ஆம் பாடம் வாழைமரப் பாட்டு
செந்தமிழ்க் காஞ்சி
'கத்தரிக்காய் கொண்டுவா' என்ற மெட்டு
வாழையைப் பார் தோழா வாழையைப் பார் தோழா.
-
ப.
வகையுடனே
1. கீழேயிருந்து பக்கம்
கிளைத்துள்ள கன்றுகளே
தாயொடு பிள்ளைகள்போல் - தழைத்திருக்கும்
(வாழை)
2. வழுக்கை மரத்தின் மேலே
பழுத்த பழத்தைப் பாராய்
கிளிப்பிள்ளை கொத்தித் தின்று - கீழே விழுந்தும்
(வாழை)
3. உலர்ந்த தண்டை இதோ பார்
ஒடுங்கின தீரமில்லை
கிழமையில் நம்மழகும் - கெடுமிவ்வாறே
(வாழை)
4. கனிய பழத்தைத் தின்றால்
இனிமையாய் இருக்குதே
இனிமேலே நாம் பிறர்க்கே
இனியசெய்வோம்
(வாழை)
5. உறுப்புகள் யாவும் நன்றாய்
உதவிடும் வாழையைப் பார்
ஒருப்பட எல்லார்க்கும் - உதவுவோம் நாம்
(வாழை)
6. கோழிதன் குஞ்சுகளைக்
கூட்டி யணைப்பதுபோல்
வாழைப்பூப் பிஞ்சுகளை - மறைப்பதைப் பார்
(வாழை)