ஞா. தேவநேயப் பாவாணர்
3
உயிரின வரிசையில் உயர்ந்தவன் மாந்த னாகும்
உயர்வா யிருத்தல் வேண்டும் வினையாவும் பயிலும் ஒலிக ளெல்லாம் பகரும் மொழியா மென்றால் பறவை விலங்கும் உயர் திணையாமே.
4
பன்னெடுங் காலமாகப் பற்பலர் முனிவரும் பண்படுத்தி யமைத்தார் செந்தமிழை
எண்ணு மறிவில்லாத இற்றைப் போலித் தமிழர் எள்ளியதை யிகழ்வார் எந்த நிலை!
5
செந்தமிழ் என்ற சொல்லும் செங்கோல் என்பது போலச் சிறப்பாக இனம்சுட்டும் அடையாகும்
குன்றிய தமிழ்பல கொடுந்தமிழாய் ஒருசார் கொச்சையெனும் இழிந்த நடையாகும்.
6
பேசுவதே மொழியாம் பிழையற்ற வழக்கெல்லாம் பெரும்புல நூலிலுள்ள நடையென்பார்
காசு பெற்றுத் தமிழைக் காட்டிக் கொடுப்பார் அதைக் காக்கும் செம்மைக் கரையை உடையென்பார்.
7
அடுக்குகின்ற அருமை உடைக்கும்நாய் அறியுமோ
அமைத்ததைக் குலைப்பரே எளியாரும் தொடுக்குந் தமிழறிந்தார் தொல்லாசிரியர் வழித் தூய மறைமலையார் தெளிவீரே.
83. நாட்டுமொழியின் கட்சிப் பொதுமை ‘செந்தாழம் பூவுந் தேன் கமழும்' என்ற மெட்டு
ப.
எந்நாட்டிலுமே தன்னாட்டு மொழி
எல்லாக் கட்சிக்கும் பொதுவன்றோ.
73