ஞா. தேவநேயப் பாவாணர்
5
தென்னூல் ஆயிரம் ஆண்டுகட்குமுன் திரவிடத் தெதும் இல்லையே
பன்னூல் துறையும் தமிழிலக்கியம்
பழமதுரையின் எல்லையே
(எல்லா)
6
பின்னே யாரியம் மேற்படை யெனப்
பெருகினும் அது பிரியுமே
முன்னே தமிழே அடிப்படையென முதுதிரவிடம் தெரியுமே
பண்
―
(காப்பி)
89. தமிழைப் பழித்தல்
ப.
தமிழைப் பழிக்க லாமோ
தாயான
து. ப.
இமிழ்நீர் வரைப்பில் இதன்நேர் சொல்லப் போமோ எதிராள ரானாலும் இதைமறுப்பார் தாமோ
உ.1
(எல்லா)
79
தாளம் சார்பு
-
(தமிழைப்)
குமரிக் கண்ணே மாந்தன் குழவிக் காலந் தோன்றிக்
குறிஞ்சி முல்லைப் பின்னர் மருதந் தவழ்ந்தோங்கித் திமிறிக் கொடுந்தமிழ் திரவிடமாய்ச் சென்று
திகழும் ஆரியத்தின் திரள்முதலாய் நின்ற
2
(தமிழைப்)
உள்ளக் கருத்தெல்லாம் தெள்ளக் களிபொங்க
கொள்ளத் துணையாகிக் குன்றாப் பன்னூல் தந்து
உணர்த்திப் புலனைந்தும் திளைத்துப் பிழைப்பிங்குக்
கூறும் இருமைநற் பேறும் பெறவந்த
(தமிழைப்)