ஞா. தேவநேயப் பாவாணர்
3
ஆயனில் லாமந்தை அங்கலாய் கடமாம் அருந்தமிழ் நாடெங்கும் அடிமைசேர் மடமாம் தேயுந் தமிழ்நாடும் திறந்துள்ள மடமாம் திசையெட் டாரும்வந்து சேரவே இடமாம்.
4
பணத்தைச் சுருட்டுவார் பழகிய தலைவர் பதவியோடு பட்டம் பெறுவாரே சிலவர் கனத்தைப் புகழோடு கருதுவார் புலவர் கழகத்தால் வணிகத்தைப் பெருக்குவார் வலவர்
5
மறைமலை யடிகளும் மாண்டனர் முன்னே மறைந்தார் பன்னீர்ச்செல்வம் முந்நீரிற் பின்னே இறைவனே தமிழர்க்குத் தலைவனாம் இன்னே இறைஞ்சி வணங்குக அவனடி மன்னே.
120. தமிழர் பின்பற்றவேண்டிய தலைவர் இருவர்
—
பண் செஞ்சுருட்டி
ப.
எந்தக் கட்சியிலேநீ யிருந்தாலும் என்றும்
முந்திப்பற்றும் தலைவர் வள்ளுவரே.
து . ப .
பிந்தித் தலைவர் மறைமலை யடிகள்
―
107
தாளம் - முன்னை
பிறர்
(எந்தக்)
சொந்தப் பெருநலமே கொள்ளுவரே
வாழ்வினில் அனைவரும் உயர்வடையத் - திரு
வள்ளுவர் வகுத்தனர் நல்வழியே
தாழ்வற மறைமலை யடிகள் பின்னே மிகத்
—
தந்தனர் தனித்தமிழ் இன்மொழியே
(எந்தக்)