உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 6 கேளாதே கேளாதே என்மகனே - அந்தக் கேடுசெய் கோடரிக் காம்புகள் சொல் வாளாலே நம்தமிழ் மானத்தையே - காத்து வாழுவம் வள்ளுவன் சொன்ன வழி. இசைத்தமிழ்க் கலம்பகம் 195.சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு பண் (நாதநாமக்கிரியை) ப. தீக்குளித்தே யிறந்தான் - சின்னச்சாமி தீக்குளித்தே யிறந்தான் - திடுக்கிடத் து. ப. தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு உ.1 தாளம் - முன்னை ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில் வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின் வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத் 2 நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் மதமென்றும் நானிலத்தே மாந்தர் நல்குவர் உடல்வேக (தீக்) (தீக்) ஈடொன்று மில்லாமல் இனியதாய் மொழிக்கென்றே ஈந்துநல் வலவுடல் இளமையில் உயர்வாகத் (தீக்) 3 வெந்தெரி யுடலெல்லாம் விளம்பறு வேதனை விருவிருத் தேறினும் வீறுகொண் டேறென எந்தமிழ் வாழ்கவே இந்தியே ஒழிகென இறுதி வரைகூறி இதுவேநல் லாறெனத் (தீக்)