ஞா. தேவநேயப் பாவாணர்
3
ஏந்தியே இந்தியைத் தாங்கும் பலர்
―
ஏதும் அதையறியார் என்றசொல் ஓங்கும் வாழ்ந்திட ஒருபொருள் வேண்டும் எனின்
―
வாங்க எவர்மனமும் தானாகத் தூண்டும்.
(நாம்)
194. தாய் தன் மகனைக் கடிந்துரைத்தல்
""
"போகாதே போகாதே என் கணவா என்ற மெட்டு போடாதே குடவோலை என்மகனே அந்தப்
பொல்லாத இந்திக்கே என்று சொன்னேன் கூடாத பேரோடு கூடி நீயும் - மிகக்
கூர்கெட்டுப் போனாய்நான் என்ன செய்வேன்.
2
ஆரியத் தாலேநம் செந்தமிழ்க்கே - முன்னே ஆயின கேட்டினுக் களவேயில்லை சீரிய செம்மையால் மீந்திருக்கும் - அந்தச் சிற்றள வும்இந்தி யால்அழியும்.
3
இந்தியால் தந்தமிழ் கெடுவதில்லை - என்று இந்நாட்டைக் காட்டிக் கொடுப்பார் சொல்வார் முந்தியே மறைமலை யடிகள் சொன்ன நல்ல மூதுரை யேதலை மேற்கொள்ளுவாய்.
4
பயனில்சொல் பாராட்டு வானை முன்னே மக்கட் பதரென்று சொன்னாரே வள்ளுவரும் பயனிறைத் தீங்கே தரும் இந்தியை - இன்று பயில்வாரை என்னென்று சொல்லுவதே.
5
நல்ல தமிழ்க்குடி நாம் பிறந்தோம்
நாகரிகங் கண்டார் நம்மவரே
முன்னே
தெள்ளுந் தமிழ்இன்றி இவ்வுலகில் - நாமே
தீண்டா விலங்குக ளாய்விடுவோம்.
163