உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

பத்தாயிரம் மேலும் பற்றாருந் தாம்மேவும்

மெத்த வான்மீகியை மெத்துங் கம்பன்பாவும்

3

சுடரோன் வெங்கதிராலே சொலிக்குந் தண்மதிபோலத் தொடர்புங் கம்பன் பாங்கே துளசிதாசன் போங்கும்

4

இராமகதை மூலம் இந்திபுகுத் தெண்ணம்

இராமல் எந்தக்காலும் இருக்க நல்லவண்ணம்.

(துளசி)

(துளசி)

(துளசி)

199. தமிழ்கெடவரும் வளர்ச்சித்திட்டம் பயனற்றது 'தோடுடைய செவியன்' என்ற மெட்டு

பண் நாட்டை

1

167

தாளம் - முன்னை

வாளைதவழ் வெள்ளங்களி வந்தயல் துள்ளி யிளந்தெங்கின் பாளைமிசை வாளின்மிளிர் பண்ணை நீர்ப் பாசனங் கண்டாலும் காளையிவர் கண்ணுதல்முக் காலைதேர் கழகத் தமிழ்நைய நாளைவட இந்தியொடு நாகரி நலியின் ஒருநன்றோ.

2

இரும்பும் இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்பு நிலக்கரியும் பரும்பெனக் குவிந்து தொழிற்சாலைகள் பலவும் எழுந்தாலும் விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்த தமிழ்நைய உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறு செயின்நன்றோ.

3

கீழ்கரை நின்றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை

மேல்கரை நேர்சேர விணையாகிப்பின் மின்னோட்டம் வந்தாலும் சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின் ஒருநன்றோ