ஞா. தேவநேயப் பாவாணர்
2
பத்தாயிரம் மேலும் பற்றாருந் தாம்மேவும்
மெத்த வான்மீகியை மெத்துங் கம்பன்பாவும்
3
சுடரோன் வெங்கதிராலே சொலிக்குந் தண்மதிபோலத் தொடர்புங் கம்பன் பாங்கே துளசிதாசன் போங்கும்
4
இராமகதை மூலம் இந்திபுகுத் தெண்ணம்
இராமல் எந்தக்காலும் இருக்க நல்லவண்ணம்.
(துளசி)
(துளசி)
(துளசி)
199. தமிழ்கெடவரும் வளர்ச்சித்திட்டம் பயனற்றது 'தோடுடைய செவியன்' என்ற மெட்டு
பண் நாட்டை
1
167
தாளம் - முன்னை
வாளைதவழ் வெள்ளங்களி வந்தயல் துள்ளி யிளந்தெங்கின் பாளைமிசை வாளின்மிளிர் பண்ணை நீர்ப் பாசனங் கண்டாலும் காளையிவர் கண்ணுதல்முக் காலைதேர் கழகத் தமிழ்நைய நாளைவட இந்தியொடு நாகரி நலியின் ஒருநன்றோ.
2
இரும்பும் இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்பு நிலக்கரியும் பரும்பெனக் குவிந்து தொழிற்சாலைகள் பலவும் எழுந்தாலும் விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்த தமிழ்நைய உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறு செயின்நன்றோ.
3
கீழ்கரை நின்றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை
மேல்கரை நேர்சேர விணையாகிப்பின் மின்னோட்டம் வந்தாலும் சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின் ஒருநன்றோ