உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

4

இசைத்தமிழ்க் கலம்பகம்

பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டி தொட்டியெல்லாம் நள்ளியெதுங் கட்டணமேயின்றி நல்கூர்ந்தாருங் கற்றாலும் வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்த தமிழ்நைய கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவி வரின்நன்றோ.

5

முதியோரெலாம் இளமைவர மூப்புச் சம்பளமும் பெற்று வாழ்ந்து பதியாமலே இளைஞரெலாம் பாங்கான பதவிகள் பெற்றாலும் மதிசூடி முன்மதுரை யமர்மன்றஞ் சேர்ந்தாய்ந்த தமிழ்நைய புதிதாய்வரும் இந்தியோடு நாகரி புகுமேல் ஒருநன்றோ.

6

நண்ணும் நடுப்பகல் மாணவர் நாட்டுள்ள பள்ளி களிலெல்லாம் உண்ணும்படி அறுசுவைசேர் உண்டிகள் உதவியே வந்தாலும் பெண்ணையிடங் கொண்டான்முனம் பேணியே ஆய்ந்த தமிழ்நைய எண்ணிவரும் இந்தியொடு நாகரி இன்னல் செயின்நன்றோ.

7

புத்தாடை பல புத்தகங்கள் பூத்துகிற் பொக்கணத்தி லிட்டுத் தத்தளிக்கும் மாணவரெல் லாருக்கும் தந்தையிற் றந்தாலும் பித்தன்எனும் பெம்மான்முனம் பீடுற ஆய்ந்த தமிழ்நைய எத்திவரும் இந்தியொடு நாகரி எய்தின் ஒருநன்றோ.

8

ஊர்தோறும் பல் உணவுப்பொருள் உண்மையில் ஏழைகளே

நேர்மைவிலைக் கடைகள்பல அண்மையில் நிலையா

வாங்கும்

யிருந்தாலும்

நீர்மேவிய சடையன்முனம் நீடியே ஆழ்ந்த தமிழ்நைய நீர்மையிலா இந்தியொடு நாகரி நெருங்கி வரின்நன்றோ.