ஞா. தேவநேயப் பாவாணர்
9
கற்றோருடன் மற்றோரெலாங் கண்ணிய பணியாற் பெரு வருவாய்
வற்றாநல வாழ்விற்பெறும் இன்பமே வழி வழியுற்றாலும் பொற்றாமரைக் குளமேற் சிவப் புங்கவன் ஆய்ந்த தமிழ்நைய முற்றாவியல் இந்தியொடு நாகரி முடுகி வரின்நன்றோ.
10
பலகலைதேர் கழகமெனப் பைந்தமிழ் நாட்டிலுள வெல்லாம் மலைபோற் குவிநல்கை மகிழ்கூரவே மதிதோறு முற்றாலும் கலகலென வொலிக்குங் கழற் கண்ணுளன் ஆய்ந்த தமிழ்
நையக்
கலகம்விளை இந்தியொடு நாகரி கறுவி வரின்நன்றோ.
க
200. இந்தியார் ஏய்ப்பு
'தேரத்திலே தில்கு சத்தா' என்ற மெட்டு
1
இந்தியார்க்கும் சீனருக்கும் என்ன வேற்றுமை இந்தியாரும் தம்மொழியால் எம்மைத் தாக்கினார்.
2
விருப்பமின்றி இந்தியையாம் புகுத்தோம் என்றனர் பொருத்தமின்றி மேன்மேல்அதைப் புகுத்தி நின்றனர்
3
எள்ளளவும் தகுதியில்லா இந்தி மொழியை எள்ளிநகை யாடச்செய்தார் இந்த வழியே
4
நட்பெனவே நடித்துக் கொண்டு நாணமில்லாமல் உட்பகையைப் பிடித்தெமக்கே ஊறு செய்கின்றார்
(இந்தி)
(இந்தி)
(இந்தி)
169