உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

கண்ணிய பொருளொன்றைக் காணச் செல்வான் முன்னே கண்ணைக் கட்டிக்கொண்டு கால்தடுமாறல் என்னே

(வண்ண)

3

மொழிநூலின் திறவுகோல் மூழ்கியிருக்குந் தமிழ் வழிதவறித் திரி வடமொழியிலே அமிழ்

(வண்ண)

4

ஆவின் வருவதெல்லாம் அருந்திடும் பாலாகுமோ

அமெரிக்கர் சொல்வதெல்லாம் அரியமெய்ந் நூலாகுமோ (வண்ண)

5

ஆரிய வெறியரும் அணையுங் கொண்டான் மாரும் வேரியல் தெரிவதை விலக்க வழியாய்க் கோரும்

6

ஆங்கிலத்தைச் சிறந்த அளவையாக் கொண்டேனவும் ஆயிரவாண்டுள் எல்லாம் அடியோடு மாறுமென்னும்

7

எந்தமொழியும் மாந்தர் இயம்புங் கொச்சையே யென்று செந்தமிழின் செம்மையைச் சிதைக்க வழியாம் இன்று

(வண்ண)

(வண்ண)

(வண்ண)

232. என் அண்ணாமலை பல்கலைக் கழகப் பணி

‘புள்ளிக் கலாப மயிற்பாகன்' என்ற மெட்டு

1

அண்ணாமலை பல்கலைக் கழகம் என்றும்

அருந்தமிழ் காக்கும் என்னும் உலகம் -

ஆரியம் வேரூன்றித் தமிழ் சீரழிந்து போனதாரே கண்டார்

அங்கே

வெளி விண்டார்.

193