192
இசைத்தமிழ்க் கலம்பகம்
229. தாய்மொழிக் கல்வி என்னும்
தமிழ்வாயிற் கல்வி
'அன்னையுந் தந்தையுந் தானே' என்ற மெட்டு
ப.
தாய்மொழிக் கல்வியுந் தானே - தமிழ்த்
தூய்மொழி யன்றெனில் தொடங்குவ தேனே.
(தாய்)
து.ப.
வாய்மையில் தமிழன்பு தானோ - தமிழ்
வல்லவரை விலக்கித் தள்ளுவ தேனோ
தேயநின் றாங்கில நீக்கம் பின்னே
திடுமென இந்தியைப் புகுத்தலே நோக்கம்.
(தாய்)
ஆடு நனைகின்ற தென்றே
அ. ஓநாய்
அழுது கண்ணீர் விடுவ துண்மையோ அன்றே
-
நாடியே தமிழதன் நன்றே முன்பு
நயவாத பேர்நயக் கின்றனர் இன்றே
தேடியே உலகெங்குஞ் சென்றே - காணின்
திருந்திய தூய்மொழி தீந்தமிழ் ஒன்றே
கூடிய தூயசொல் கண்டே – பின்பு
கோவையிற் புகுத்துக தூவுளங் கொண்டே.
231. வண்ணனை மொழியியலின்
(Descriptive Linguistics) வழுவியல் ‘மாதாட பாரதேனோ' என்ற மெட்டு
பண் கமாசு
வண்ணனை மொழியியலே
வழிமயலே
உ.1
(தாய்)
தாளம் - ஈரொற்று
முன்னமே மொழிமுதல் மூலமுண்மையைக் கண்டார்
இந்நிலை மொழியெலாம் இடுகுறியெனக் கொண்டார் (வண்ண)