உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இசைத்தமிழ்க் கலம்பகம்

229. தாய்மொழிக் கல்வி என்னும்

தமிழ்வாயிற் கல்வி

'அன்னையுந் தந்தையுந் தானே' என்ற மெட்டு

ப.

தாய்மொழிக் கல்வியுந் தானே - தமிழ்த்

தூய்மொழி யன்றெனில் தொடங்குவ தேனே.

(தாய்)

து.ப.

வாய்மையில் தமிழன்பு தானோ - தமிழ்

வல்லவரை விலக்கித் தள்ளுவ தேனோ

தேயநின் றாங்கில நீக்கம் பின்னே

திடுமென இந்தியைப் புகுத்தலே நோக்கம்.

(தாய்)

ஆடு நனைகின்ற தென்றே

அ. ஓநாய்

அழுது கண்ணீர் விடுவ துண்மையோ அன்றே

-

நாடியே தமிழதன் நன்றே முன்பு

நயவாத பேர்நயக் கின்றனர் இன்றே

தேடியே உலகெங்குஞ் சென்றே - காணின்

திருந்திய தூய்மொழி தீந்தமிழ் ஒன்றே

கூடிய தூயசொல் கண்டே – பின்பு

கோவையிற் புகுத்துக தூவுளங் கொண்டே.

231. வண்ணனை மொழியியலின்

(Descriptive Linguistics) வழுவியல் ‘மாதாட பாரதேனோ' என்ற மெட்டு

பண் கமாசு

வண்ணனை மொழியியலே

வழிமயலே

உ.1

(தாய்)

தாளம் - ஈரொற்று

முன்னமே மொழிமுதல் மூலமுண்மையைக் கண்டார்

இந்நிலை மொழியெலாம் இடுகுறியெனக் கொண்டார் (வண்ண)