இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
248. தமிழர் என்போரெல்லாம் தமிழராகார்
'கல்லிலே கலைவண்ணங் கண்டான்' என்ற மெட்டு
ப.
தமிழர் என்றிருப்போர் எல்லாரும்
―
நல்ல
தமிழன்பரோ நெஞ்சைத் தடவியே பாரும்.
து. ப.
தமிழர் என்றில்லாத பேரும் - நல்ல
தமிழுக்குத் தொண்டுசெய்துள்ளாரே தேரும்.
(தமிழர்)
உ.1
நக்கீரன் திருவாத வூரன் நல்ல
—
நாவல்ல பரிதிமாற் கலைஞன் என் பேரன்
தக்காங்குத் தமிழதி காரன் - ஆன
சாமிநாதை யன்பார்ப் பாவாரோ தேரின்.
(தமிழர்)
2
பாவேந்தன் வீரமா முனிவன் - தமிழ்ப்
பன்னூல் மொழிபெயர்ப் பாளன்போப் பினியன்
தாவியாராய் கால்டு வேலும் – நாமே
தலைமேற் கொள்ளுந் தமிழாளர்எக் காலும்.
(தமிழர்)
3
கொண்டான் புத்தமித்தி ரன்தான் - தமிழ் கொத்திய தேசிகன் சாமிநா தன்காண்
தண்டா வையாபுரி யென்பான்
—
இவர்
தவறிக் கனாவிலும் தமிழர்ஆ கார்தான்.
(தமிழர்)
207