உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

பண்

தோடி

249. ஒற்றுமையுரம்

‘ஆரகிம்பவே' என்ற மெட்டு

ப.

இசைத்தமிழ்க் கலம்பகம்

தாளம்

ஈரொற்று

சேர்ந்து வாழ்வதே (நம்) - சிறந்த வலிமை

து .ப.

சிறுகோலும் செறிந்து நின்றிடின் சேர்த்தொடிக்கவே ஏலுமோ.

2.1

(சேர்ந்து)

சேர சோழ பாண்டியர்கள் சேர்ந்துநின்ற கால முழுதும் வேறரசர் யாரும் வெல்ல விரற்கிடையும் இயன்ற தில்லை. (சேர்ந்து)

2

மூவரால் தொண்ணூற் றெழுவர் முறியடிப்புண் டாரென் சொல்லை ஏவர் நம்புவார் இவ்வுலகில் இதனிலும் வேறிழிவே யில்லை.

3

(சேர்ந்து)

பல்குழுவொடு பாழ் செயுட்பகை பைந்தமிழைக் கொல் குறும்பே கல்லாமையொடு கொண்டுவந்த கட்டாய இந்தி யிங்கே.

(சேர்ந்து)

4

பென்னம்பெரிய தமிழினந்தான் பிறப்பொடு தொடர்புற்ற பல சின்னஞ்சிறிய குலங்களாகச் சிதைந்து பழஞ்சீர் கெட்டதே.

(சேர்ந்து)