இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
திங்களின் வழியெனும் தென்னவன் சார்ந்த தீந்தமிழ் உலகினில் தெருவெலாம் முழங்க வங்கநற் கலமென வாழ்வினில் நீந்த வள்ளுவன் பொதுமறை வழிவழி வழங்க
284. தமிழ் வாழ்த்து
பண் - (காப்பி)
ப.
வாழிய வேங்கடந் தென்குமரி
வைகிய ஆயிடைச் செந்தமிழே
வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே வேறுபல் நூல்தமிழ் வீறுகவே
ஏழிசை நாடகம் எல்லாம் தமிழ்ஆக
இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக இந்தியும் செல்லுக வந்தவழி.
―
பண் கலியாணி
285. தமிழர் வாழ்த்து
ப.
செந்தமிழ் மக்கள் எங்கும் சீராய் நீடு வாழிய.
(மங்கலம்)
235
தாளம் - ஒற்றை
―
தாளம் முன்னை
து. ப.
முந்துபண்பாடு கண்ட முத்தமிழோர் வாழிய
(செந்)
எந்தவூருஞ் சொந்தவூர் எல்லாரும் நல்லினம் ஏத்தும் கடவுள்ஒன்றே என்னும் நல்லோர்வாழிய
(செந்)