உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

திங்களின் வழியெனும் தென்னவன் சார்ந்த தீந்தமிழ் உலகினில் தெருவெலாம் முழங்க வங்கநற் கலமென வாழ்வினில் நீந்த வள்ளுவன் பொதுமறை வழிவழி வழங்க

284. தமிழ் வாழ்த்து

பண் - (காப்பி)

ப.

வாழிய வேங்கடந் தென்குமரி

வைகிய ஆயிடைச் செந்தமிழே

வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே வேறுபல் நூல்தமிழ் வீறுகவே

ஏழிசை நாடகம் எல்லாம் தமிழ்ஆக

இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக இந்தியும் செல்லுக வந்தவழி.

பண் கலியாணி

285. தமிழர் வாழ்த்து

ப.

செந்தமிழ் மக்கள் எங்கும் சீராய் நீடு வாழிய.

(மங்கலம்)

235

தாளம் - ஒற்றை

தாளம் முன்னை

து. ப.

முந்துபண்பாடு கண்ட முத்தமிழோர் வாழிய

(செந்)

எந்தவூருஞ் சொந்தவூர் எல்லாரும் நல்லினம் ஏத்தும் கடவுள்ஒன்றே என்னும் நல்லோர்வாழிய

(செந்)