இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
238
இசைத்தமிழ்க் கலம்பகம்
288. ஒன்றிய பன்னாட்டின வாழ்த்து 'மங்களஞ் செழிக்கக் கிருபையருளும்' என்ற மெட்டு
ப.
பாரிலே ஒன்றிய பன்னாட்டினம் நெடும்
பல்லாண்டு வாழவே.
அ.1
சேரவெல்லா நாடும்ாகவே செற்றமில் லாமலே ஒற்றுமையாய் ஓர்இனம் எனவே உலக ஆட்சிபெற்றுச் சீரிய அமைதி செம்மையாய் நிலைக்கத்
தீய வணுக்குண்டு தேரும் பயிற்சிகள் தீரவும் ஒழியவே.
2
எப்பொழு தும்இரு நாட்டிடையே சச்சரவு வழக்கொன் றிருந்தால் தப்பித மாகவே தருக்கிப் போரிடாமல் செப்ப மாகப்பிறர் தக்க நடுத்தீர்ப்புச் செப்பிய முறையில் ஒப்புரவாகியே
உட்பகை தீரவே.
289. உலக வாழ்த்து
‘எங்கிருந்தாலும் வாழ்க' என்ற மெட்டு
வாழ்க! வாழ்க!
வையகத் தாரெலாம் வாழ்க!
ப.
து. ப.
-
கீழையர் மேலையர் வாழ்க! சீர் கிளர்பல நாடரும் வாழ்க!
ஏழையர் மாழையர் வாழ்க! நேர் எ எந்நிறத் தாருமே வாழ்க!
(பாரிலே)
(பாரிலே)
(வாழ்க)