உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

8. பழந்தமிழன் சிறப்பு

‘ரகுபதி ராகவ ராசாராம்' என்ற மெட்டு

1

தமிழா உன்றன் முன்னவரே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே.

2

பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம்

3

யாழுங் குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம் ஏழை நிலையை மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம்

4

(தமிழா)

(தமிழா)

கலத்திற் கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம் கரையில் அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம்

5

(தமிழா)

தூங்கெயில் மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம் ஓங்கெயிற் பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம் அடுத்தவனாம் (தமிழா)

6

காந்தக் கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம் கங்கை வடக்கும் எட்டினனாம் கயலைப் பனிமலை நட்டினனாம்

7

நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம் ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம்

8

அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி நெய்தானாம்

(தமிழா)

(தமிழா)

அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிர விளைநன் செய்தானாம். (தமிழா)

9

நானில மெங்கும் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு நாகரி கம்நற்பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு

(தமிழா)

7