உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இசைத்தமிழ்க் கலம்பகம்

9. இதுவும் அது (தமிழ நாகரிக முன்மை) 'கப்பற்பாட்டு' மெட்டு அல்லது வேறிசைந்த மெட்டு

1

மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!

2

மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே!

3

பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே!

4

பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே!

5

அரசியலை முதன்முதலாய் அமைத்தவனும் தமிழனே அறம்வளர நடுநிலையாய் ஆண்டவனும் தமிழனே!

6

அரிசியினாற் சோறுமுதல் ஆக்கியவன் தமிழனே அறுசுவையாய் உண்டிகளை அருந்தியவன் தமிழனே!

7

பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே!

8

கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே கலப்படையால் குணத்தீவும் காவல்பூண்டான் தமிழனே!

9

வடிவேலால் எறிகடலை வணக்கியவன் தமிழனே வடிம்பலம்ப நின்றபெரு வழுதியொரு தமிழனே!