உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இசைத்தமிழ்க் கலம்பகம்

3

கன்றுதனை யிழந்து கதறிய ஆவினால்

கடைமணி யசையவும் காவலனும்

கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங்

கோன்முறை குலவிய நாடு

4

கூலிகொடுத் தினிய கரும்புதினச் சொல்லிக்

கூடிய விருந்தின்பின் மிச்சிலுண்டு

(நானிலத்)

நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி

(நானிலத்)

நிறைவேற்றின வேளாளர் நாடு

5

வறுமையால் வாடிய வண்டமிழ்ப் புலவனும் வாழவென் றரசன்தன் தலையுந் தந்தே

(நானிலத்)

அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும்

ஆலவட்டம் விசிறும் நாடு

6

முத்தமி ழிலக்கணம் முதுமறை மந்திரம்

முன்னரும் பல்கலை இன்குறளே

சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும்

சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு

32. தாய்நாட்டு வழுத்து

வந்தே மாதரம்' என்ற மெட்டுவகை

ப.

(நானிலத்)

தாய்நாடே போற்றி

உ. 1

சேயரின் வாழ்நாள் சிறந்திடக் கனியும் சீரிய வுணவும் செம்பொனும் மணியும்

வாயுறை பலவும் வழங்குவை இனியும்

வண்பெருந் தமிழே வழிவழி யணியும்

(தாய்)