உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

4

இசைத்தமிழ்க் கலம்பகம்

ஆரியமோ சேமியமோ பேருமறி யாது

சீரியநற் செந்தமிழே பேசினோம்வ ழாது

5

திணைப்பிரிவே யன்றிவேறு குலப்பிரிவும் இல்லை தினைத்துணையும் பகையின்றித் திளைத்தனம்நான் கெல்லை

6

முருகனொடு வள்ளியெங்கள் முன்னோரின் தெய்வம் சரவணன்என் றொருகதைபின் சாற்றினார்என் செய்வம்.

7

தினைமாவைத் தெள்ளியதில் தேன்கலந்தே தின்போம் மலையோரம் மேயவரும் மான்கறியும் உண்போம்

8

பாண்டியரும் வேட்டம்வரின் பாங்காகி விளிப்போம் வேண்டியபல் லாட்டுகளும் விளையாடிக் களிப்போம்

9

மரவுரியும் மான்றோலும் துறவிகளுக் கிறைப்போம் மருந்துகளும் சித்தருக்கு மருங்கிருந்தே யரைப்போம்

10

அடிமையென்றும் வறுமையென்றும் அறிந்ததில்லை நாங்கள் குடிமைஎன்னும் ஓரினமாய்க் கூடிவாழ்ந்தோம் ஆங்கே.