உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

39. வடமொழி வந்தவழி

பண்

(பியாகு)

ப.

வடமொழி வந்தவழி - தெரியுமா?

உ. 1

வடமேற் கணவாய் வழியாக வந்து

கடுமை யுடன்சிறு பான்மை கலந்து

வதித்தனர் ஆரியர் முதற்கணே சிந்து

கரந்ததே யவர்மொழி கடுகி மறந்து

2

33

தாளம் முன்னை

(வட)

ஆரிய அடியும் அருந்தமிழ் நிலவும்

அதனொடு வடதிர விடம்மறை குலவும்

சீரிய செந்தமிழ்ச் சொற்களே பலவும்

செயற்கை யாம்சமற் கிருதத்தொடு நிலவும்

(வட)

3

வெண்ணிறத் தால்நிலத் தேவரே என்று

வேதியர் தம்மையே விளம்பிய துண்டு

நண்ணிய அவர்மொழி விண்மொழி என்று

நம்பியே தமிழரும் நயந்தனர் பண்டு

(வட)

40. தமிழ் இயல்புந் திரிபும்

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

அருமை முத்தமிழ்ச் சீரும்

ஆரி யத்தடி வேரும்

திரவி டப்பெருந் தூரும்

தென்மொ ழித்திறம் தேரும்.