உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இசைத்தமிழ்க் கலம்பகம்

46. வடமொழியால் தமிழ் கெட்ட வகைகள்

'சிலுவை சுமந்திதோ செல்கின்றார்' என்ற மெட்டு

1

வடமொழி யால்தமிழ் வாழ்வை யிழந்ததே மடமையி னால்தமிழ் மாந்தரும் தந்ததே.

2

வழிபாட்டு மொழியாக வழங்காத படிதமிழ் இழிவாகச் சிறுமையில் இயன்றது நெடிதுமே.

3

அந்தநாள் கொடுந்தமிழ் ஆனபல் திரவிடம் செந்தமிழ்ப் பகையெனச் சேர்ந்தஆ ரியத்திடம்.

4

தமிழையே தாழ்வென்று தமிழர்என் போருமே தள்ளினர் தமிழ்நூல்கள் வெள்ளமே சேருமே.

5

வழங்காமை யாற்பல வண்டமிழ்ச் சொற்களே விளங்காது போய்ப்பல வீழ்ந்துபின் பட்டன.

6

தம்பொருள் இழந்தன தமிழ்ச்சொற்கள் சிலவுமே எம்மொழி யோவென இடந்தந்து நிலவுமே.

7

தலையிடைக் கழகத்துத் தனித்தமிழ் நூலெல்லாம் அலையிடைத் தப்பினும் அழிந்தனபின் னெல்லை.

8

கடைத்தமிழ்க் கழகமும் கலைந்தது மாயமே நடைத்திறம் ஒலிசொல்லும் நற்றமிழ் நோயுமே.

9

வரலாறு மறைந்ததால் வடமேல்நின் றிங்குற்றே வடமொழியால் தமிழ்வளம் பெற்றதென் றிட்டார்.