உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

3

இசைத்தமிழ்க் கலம்பகம்

தொல்கதை களும்பல தோற்றரவுக் கதையும்

தோன்றின வடமொழியே

தெள்ளியே அவற்றையும் தேர்ந்து பார்ப்பின் மூலங்கள் தென்னவர் கண்டவென்று தெரியுங் கயல்விழியே

64. கோயில் வழிபாட்டு மொழி

பண்

-

(காப்பி)

ப.

கோயில் வழிபாடுகள் தாய்மொழியிற் செய்யினே வாய்மையாகும் அதனை ஆயுமின் நீரே

து . ப .

தூயமொழி யென்றேனைத் தேய மொழியிலே வாயிலும் அயலவன் ஆயினென் சீரே - கோ.

•.1

தந்தையோடே பிள்ளை தானுரை யாடவும்

வந்திடை நிற்பனோ மற்றொரு மொழியன் முந்திய இறைவனை முன்னியே தொழவும்

பிந்திய செயன்மொழிப் பட்டனோ வழியன்

2

கொஞ்சமுந் திருந்தாத குழந்தையின் மழலையே கொண்டாடி மகிழ்ந்திடும் தந்தையும் பாரும்

எந்தொரு கல்வியும் இல்லாதான் மொழியே

எம்பெரு மானுக்கும் இன்பமாம் தேரும்

3

கும்பிடும் அடியவன் நம்பனை வழுத்தலும் கோருவ கூறலும் குலவுதாய் மொழியே

முன்பெதுந் தெரியாத வன்புறு மொழியில்

முன்னாத பொருள்பிறன் முரலுதல் பழியே

(குமரி)

தாளம் - முன்னை

(கோயில்)

(கோயில்)

(கோயில்)