58
இசைத்தமிழ்க் கலம்பகம்
3
சிந்துவெனும் ஆற்றுவெளி சேர்ந்த வேத ஆரியரால் இந்துவென நாவலம் பொழில் ஏற்றது பெயரே
ஏற்றது பெயரே – மதம்
மேற்றதுந் துயரே
4
செந்தமிழ மதமிரண்டு சிவனியம் மாலியமே என்று சீரறு நான்முகனை யவற்றில் சேர்த்ததே யிந்து
சேர்த்ததே யிந்து - அதைத்
தீர்த்தலே நன்று
5
நான்முகனைத் தமிழமக்கள் நம்பினதே யிலை வழக்கில்
நாடும் வழிபாடவனுக்கு நடப்ப தில்லையே
நடப்ப தில்லையே - கதை
தொடுக்கும் சில்லையே
6
சிவநெறியும் மால்நெறியும் சேர்வதில்லாத் தனிநெறிகள் சிவனெனவே மாலும் முத்தொழில் செய்வன் என்பாரே செய்வன் என்பாரே - அதன் மெய்ம்மையும் பாரே
7
முத்திரு மேனியர் முறையே முத்தொழிலர் எனுந்துறையே வைத்ததினால் பெரியன் யாரென வழக்கு மூண்டதே
வழக்கு மூண்டதே பெருஞ்
சழக்கு நீண்டதே
8
இருதமிழ மதமும் இந்து என்றாரியம் ஏய்க்கும் வந்து
என்மதமே சிவனியம் அன்றேல் மாலியம் என்பாய்
(இந்து)
(இந்து)
(இந்து)
(இந்து)
(இந்து)
மாலியம் என்பாய்
―
அதே
மாயவம் முன்பாய்
(இந்து)