உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

66. முத்திருமேனியர் (திரிமூர்த்திக்)

கொள்கை தமிழரதாகாமை

'தங்கத்தி லேயொரு குறையிருந் தாலும்' என்ற மெட்டு

1

முத்திரு மேனியர் கொள்கை யிந்நாட்டில் எத்துணையும் இல்லை பரு

முத்தொழி லும்இறை ஆற்றுவன் என்பதே ஒத்ததாம்இவ் வெல்லை.

2

சிவனொடு திருமால் செந்தமிழ்த் தெய்வம் சீரிய வரலாறே சொலும் இவரிரு வருமோர் இறையே எய்திய இடத்தாற் பெயர் வேறே.

3

சிவன்திரு மாலெனும் இருவரும் ஒண்ணே அறியார் வாயில்மண்

ஓர் அரியநல் லுண்மை அறிவாய் இந்த அழகாம் பழமொழிக் கண்.

4

சிவன்முத் தொழிலைச் செய்வான் என்றே செப்பும்

மெய்கண்டான்

யவனும் அதுவாக் கடவுள் வாழ்த்துக் கம்பன் செய்கின்றான்.

5

கரி

பிரமனைத் தெய்வம் என்றே தமிழர் பேணியதே யில்லை - தமிழ் மரபுறு மதத்தை ஆரியப் படுத்த மருவும்அவன் தொல்லை.

67. தமிழ்த் திருமணம்

‘பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு

ப.

பழந்

தமிழிலே திருமணஞ் செய்க தமிழரின் முறைகளே தழுவியமைக தன் மதிப்புடன் வைக (என்றும்)

(தமிழிலே)

59