உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

6. ஈறுகளைப் பொருண்மரபறிந்து புணர்க்கவேண்டும்.

ஒவ்வோர் ஈறும் ஒவ்வொரு அல்லது சிற்சில பொருள்களை

மரபாகக் காட்டும்.

எ-கா : அல்.

செம்மல், கருவல், வள்ளல் - உடையோனை உணர்த்திற்று.

வறுவல், நொறுவல் - செய்பொருளை உணர்த்திற்று.

ஆடல் தொழிலை உணர்த்திற்று.

தோன்றல் - செய்வோனை உணர்த்திற்று.

ஒரே பொருட்குப் பல ஈறும் ஏற்கும். ஈறு பெறுஞ் சொல்லின் இறுதிக்கேற்ப ஓர் ஈற்றைச் சேர்க்க வேண்டும்.

எச்சம், தோன்றல், ஓதுவான், விறகுவெட்டி, வெந்தை என்பவற்றி லுள்ள அம், அல், ஆன், இ, ஐ என்னும் ஈறுகள் செய்வோனையே குறித்தன. குற்றியலுகரச் சொற்களெல்லாம் செய்வோன் பொருளில் இகரவீற்றை

ஏற்கும்.

"

எ-கா : தோன்றி, ஓதி, வெட்டி, இடுக்கி.

7. ஒரு பொருள் இன்னொன்றின் பெருமைப்பாடாயிருந்தால், பெருமையடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.

எ-கா : நெருஞ்சில்

ஆனைநெருஞ்சில்

அடை

நாவல் - பெருநாவல்

குன்று - குன்றம் - ஈறு.

பெருமைப்பாட்டுப் பெயர்களைப் பெருமைப்பொருள் வேர்களி னின்றும் திரிக்கலாம்.

எ-கா : கடல், கடப்பான் படாகை.

8. ஒரு பொருள் இன்னொன்றின் குறுமைப்பாடாயிருந்தால், குறுமை யடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம்.

எ-கா :அறை

கண்ணறை

அகத்தி - சிற்றகத்தி

அடை

முறம் - (முற்றில்) - முச்சில் - ஈறு.

குறுமைப்பாட்டுப் பெயர்களைக் குறுமைப்பொருள் வேர்களினின்

றும் திரிக்கலாம்.

எ-கா : குணில், குக்கல், குற்றி, சிறுக்கன்.

9. ஒப்புமைபற்றிச் சில பெயர்களை அடைசேர்த்தும் சேராமலும் உவமையாகுபெயராகவும் திரித்தும் வழங்கலாம்.