உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

மொழிநூற் கட்டுரைகள்

ஆங்கிலத்தில் உச்சரிப் பொழுங்கின்மைபோல் இந்தியிற் பாலொழுங் கின்மையால் பல சொற்கட்குத் தனித்தனி பாலறிய வேண்டு வதாகின்றது.

2. பெயரெச்சமும் வினையெச்சமும் பால் எண் காட்டும்.

எ-டு: பெயரெச்சம் : அச்சா லட்கா : நல்ல பையன்

வினையெச்சம் :

அச்சீ லட்கீ : நல்ல பெண் பிள்ளை அச்சே லட்கே : நல்ல பையன்கள். கயா ஹை = போயிருக்கிறான்.

கயீ ஹை = போயிருக்கிறாள்.

கயே ஹைன் = போயிருக்கிறார்கள்.

3. 'வஹ்' என்னுஞ் சொல் ஒன்றே அவன், அவள், அது என்னும் மூன்று ஒருமைப்பாற் சுட்டுகளையும், வே என்னுஞ் சொல் ஒன்றே அவர்கள், அவை என்னும் இரு பன்மைப்பாற் சுட்டுகளையுங் குறிக்கும். 4. இறந்த கால வினைகளுள்,

ரு

செயப்படுபொருள் குன்றிய வினையானால் தமிழிற்போல் பால் எண்களில் எழுவாயைத் தழுவும்.

செயப்படுபொருள் குன்றா வினையானால் எழுவாயைத் தழுவாது செயப்படுபொருளைத் தழுவும். எழுவாய் 'னே' விகுதி பெறும்.

எ-டு: மைனேஏக்கோடாதேக்கா)-நான்ஓர்ஆண்குதிரையைப் பார்த்தேன்.

மைனே தஸ் கோடே தேக்கேன்) - நான் பத்து ஆண்குதிரை களைப் பார்த்தேன்.

இனி, செயப்படுபொருள் தொக்கு நின்றாலும், 'கி' என்ற வேற்றுமை யுருபைக் கொண்டிருந்தாலும், இறந்தகால வினை (எழுவாய் எந்தப் பாலிட மானாலும்) எப்போதும் ஆண்பாற் படர்க்கை ஒருமையாகவே யிருக்கும். எ-டு: ஸீத்தானே தேக்கா = சீதை பார்த்தாள்.

ஹம்னே உஸ் ஸ்த்ரீகோ தேக்கா = நாங்கள் அப் பெண்ணைப் பார்த்தோம். 5. ஆறாம் வேற்றுமை யுருபாகிய 'கா' என்பது பின்னால் வரும் பெயர்ச்சொல் ஆண்பாலாயிருந்து வேற்றுமையுருபு கொண்டிருந்தால் ‘கே’ என மாறும்.

எ-டு: ராம் கே கர் மே

இம் மாதிரியே பின்னால் வேற்றுமையுருபுடன் வரும் ஆண்பாற் பெயர்ச்சொல்லின் ஈற்றிலுள்ள ‘ஆ’ வும், அப் பெயரைத் தழுவும் உரிச்சொல்லின் ஈற்றிலுள்ள 'ஆ' வும் 'ஏ' என மாறும்.

எ-டு: ராம் கே படே கோடே பர்.

இன்னுஞ் சில மயக்கங்களுமுள.

இதுகாறுங் கூறியவற்றைத் தமிழ்மக்கள் செவ்வனே ஆராய்ந்து, எரிமடுப்பினும் இடம்பெயராத மாசுணம் போல் மந்தமாயிராது இனி னி மேலாயினும் புத்துயிர் பெற்றெழுந்து தம் தாய்மொழிக்குச் செய்ய வேண்டிய பணியை யறிந்து கடைப்பிடிப்பாராக.