உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வண்ணனை மொழிநூல்

17

இன்றியமையாது தழுவியதென்பது சொல்லாமலே பெறப்படும். ஆயினும், வரலாற்றுத் தொடர்பின்றி உண்மை தழுவாத உயிரற்ற நிலையில் வண்ணனை மொழிநூல் வளர்க்கப்பட்டு வருகின்றது. இது, அந்நூலாரின் முயற்சியின்மை, கலையுணர்ச்சியின்மை, நடுநிலையின்மை ஆகியவற்றுள் ஒன்றையே காட்டும். 2. ஆரிய அடிப்படை கொண்டது

முந்தியல் செம்மொழியாகிய தமிழை ஆராயாமையால், மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே பொதிந்து கிடப்பதை அறியாது, திரிபில் திரிபும் செயற்கையில் செயற்கையும் ஆரியத்தின் முடியுமாகிய சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு, மொழிநூற்செய்திகளையும் மொழிகளையும் மொழியுறுப்புக்களையும் முன் பின்னாகவும் கீழ் மேலாகவும் முறை பிறழக் கூறிவருவது வண்ணனை மொழி நூல்.

தமிழ் ஆரியத்தின் அடி என்பதை இன்னும் மேலையர் உணர்ந்திலர். 3. எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பது

தமிழ்போலும் இயன்மொழியை ஆராயாது ஆரியமாகிய திரிமொழி களையே ஆய்ந்ததினால், எல்லாமொழிச் சொற்களும் இடுகுறிகளே என்னும் தவறான முடிவிற்கு வந்துள்ளனர் இற்றை அமெரிக்க மொழி நூலாசிரியர்.

தமிழில் இடுகுறிச் சொல்லே இல்லையென்பதற்கு. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே." என்னும் தொல்காப்பிய நூற்பா வொன்றே போதிய சான்றாம். “மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா." என்பது, சொல்வேர்ப் பொருள் பார்த்தவுடன் அல்லது மிகத் தெளிவாகத் தோன்றாது (சில சொற்களில்) எனப் பொருள்படுமேயன்றி, திரு. வையாபுரிப்பிள்ளை கூற்றுப்போல் தோன்றவே தோன்றாது எனப் பொருள்படுவதன்று.

இயற்சொற்களில் தெளிவாகத் தோன்றும் வேர்ப்பொருள் திரிசொற்களில் மறைந்துபோம் என்னும் உண்மையைக் கீழ்க் குறித்த சொற்களினின்று அறிக இயற்சொல்

இடைகழி

வெண்ணெய்

Episcope

திரிசொல் ரேழி

வென்ன (தெலுங்கு) Biscop

மொழி தோன்றிய வகையை விளக்கி நிற்பது உலக முழுமையினும் தமிழ் ஒன்றே.

4.

சொற்கள் தம்மளவிற் பொருளுணர்த்தாது முறைப்பாட்டினாலேயே பொருளுணர்த்துவன என்பது,

அவற்றின்

இது மொழி தோன்றிய முறையை அறியாமையால் நேர்ந்த தவறாகும். இக்காலத்தும், குழைந்தைகளும் நோயாளியரும் அயன்மொழித் துவக்க மாணவரும் சில வேளைகளில் ஒரு சொல்லாலேயே தம் கருத்தைத் தெரிவித்தல் காண்க.