உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

வண்ணனை மொழி நூல்

இன்று தனிக் கலையாக வழங்கியும் வளர்ந்தும் வரும் மொழிநூல் 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் முளைத்தெழுந்த தேனும், அதற்கு வித்து தமிழ் நாட்டில் கி. மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இடப்பட்ட தென்பது,

"எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

(தொல். 640)

"மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா."

(தொல். 877)

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்

றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.”

(தொல். 880)

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே."

(தொல். 884)

என்னும் நூற்பாக்களால் உணரலாகும்.

மேனாடுகளில் கடந்த முந்நூற்றாண்டுகளாக வளர்க்கப்பெற்றுவரும் மொழிநூல், தொடக்கத்தில், ஆங்கிலத்தில், (Science of speech, Science of Lan- guage, Linguistic science, Linguistics, Glottology, Philology) எனப் பல பெயர்களைப் பெற்றிருந்தது. இவற்றுள் (Linguistics, Philology என்னும் இரண்டே இறுதியில் நிலைபெற்றன.

மொழிநூல், ஒரே சமயத்தில், வரலாறு தழுவியதாகவும் ஒப்புநோக்கிய தாகவும் பலகூறுகளாகப் பகுக்கப்படாததாகவும் உள்ளது. மாக்கசுமுல்லர் (Max Muller) விற்றினி (Whitney) செசுப் பெர்சென் (Jespersen) முதலிய மொழி நூற்பேரறிஞரெல்லாம் மேற்கூறிய மொழிநூற் பேரறிஞரெல்லாம் மேற்கூறிய முறையிலேயே மொழி நூலை வளர்த்து வந்தனர். ஆயின், அண்மையில், சில மேலைமொழி நூலறிஞர், சிறப்பாக அமெரிக்கர், மொழிநூலை,

1. வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics)

2. வரலாற்று மொழிநூல் (Historical Linguistics)

3. ஒப்பியல் மொழிநூல் (Comparative Linguistics)

என முக் கூறாகப் பகுத்து, அவற்றுள் வண்ணனை மொழிநூலையே சிறப்பாக வளர்த்து வருகின்றனர். இதன் பல குறைகள் உண்மைக்கு மாறாகவும் தமிழுக்குக் கேடாகவும் உள்ளன. அவையாவன:

1. வரலாறு தழுவாதது

வரலாறு எக்கலைக்கும் அடிப்படையாய் மட்டுமன்றி முதுகந் தண்டாயு முள்ளதென்பது, உலகறிந்த உண்மை. கலைகளுள்ளும், மொழிநூல் வரலாற்றியலை