உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

மொழிநூற் கட்டுரைகள்

அறிவாகும்' என்றேனும் பொருள்படும். பழஞ்சேர நாடாகிய கேரளத்தில், மதி என்பது 'போதும்' என்னும் பொருளில் இன்று வழங்குகின்றது.

மதம் (சமயம்) என்பது வடமொழியில் Mata என வழங்கும். அளவீடு என்னும் கருத்தொழித்து, இதுகாறுங் கூறிய எல்லாப் பொருள்களிலும், மதி என்பதனொடு தொடர்புடைய மத, மதம், மதன், மதர் முதலிய சொற்கள் - தமிழில் வழங்கி வருகின்றன. முழுகிப் போன குமரிக்கண்டத்தொடு பல உலக வழக்குச் சொற்களும், இறந்துபட்ட பண்டையிலக்கியத்தொடு பல செய்யுள் வழக்குச் சொற்களும், மறைந்து போனமையால், பல சொற் கோவைகளின் இடையிலிருந்த அண்டுகளை இன்று காட்ட முடியவில்லை. ஆயினும், தமிழ் குமரி நாட்டில் தோன்றி வடக்கே சென்று முன்னர்த் திரவிடமாகவும் பின்னர் ஆ ரியமாகவும் மாறிற்றென்றும், வடமொழி ஆயிரக்கணக்கான தென் சொற்களைக் கடன் கொண்டுள்ளதென்றும், அறிய வல்லார்க்கு நான் கூறிய யாவும் தெற்றென விளங்குதல் தேற்றம்.

மொழியாகவும் ஈறாகவும் வருங்காமான் என்று மருவும்.

எ-கா : மருமகன் மருமான், பெருமகன் - பெருமான் இங்ஙனமே திருமகன் என்பது மான் என்று திரியும்.

6

திரு என்பதை வடமொழியர் ஸ்ரீ என்று திரித்துக்கொண்டதால் திருமான் என்பது ஸ்ரீமான் என திரிந்தது இதனைச் சீமான் “எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்கினர் தமிழர். திருவரங்கம்-ஸ்ரீரங்கம்-சீரங்கம் என்னும் திரிவை நோக்குக.

சீமான் என்பதன் பெண்பால் 'சீமாட்டி'யாதலால், ஸ்ரீமான் என்பதன் பெண்பால் ஸ்ரீமாட்டி'யும் திருமான் என்பதன் பெண்பால் ‘திருமாட்டி'யும் ஆதல் வேண்டும். திருவாட்டி என்பது திருவாளர் என்பதன் பெண்பால். மருமகள் என்பதன் பெண்பால் மருமகள் என்றும் பெருமான் என்பதன் பெண்பால் பெருமாட்டி என்றும் வழங்குதல் காண்க. “கலை மருமாட்டி” (திருவிளை, திருமன 62). "பெருமாட்டி" (திவா) பெருமாள்-பிரான் பெருமாட்டி-பிராட்டி இவை மரூஉச் சிதைவு.

'வான்' என்னும் ஈற்றினில் ‘வத்', 'வதீ' என்று முறையே ஆண் பாற்கும் பெண்பாற்கும் திரித்துக் கொண்டதுபோன்றே, 'மான்' என்னும் ஈற்றினின்றும் ‘மத்’, ‘மதீ’ என்று திரித்துக்கொண்டனர் வடமொழியாளர். ஆதலால், பெண்பால் பெயர்க்குத் திருமதி என்று அடை கொடுக்காது திருமாட்டி என்று கொடுத்தல் வேண்டும். ஸ்ரீ ஸ்ரீமதி என்பன வட சொல் வடிவுகள். ஸ்ரீமத் என்பது எழுத்தெ புணர்ந்த சொல்லாகும்போது தி என்றாகும். இவ்வடிவை விலகி வேண்டும்.