உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

உரும்பு- உரும்பரம் = 1. செம்பு. 2. பெருங்காயம்.

உரும்பரம் – வ. உதும்பர = செம்பு.

உரு

=

31

உருகு. உருகுதல் 1. வெப்பத்தால் இளகுதல். 2. மனநெகிழ்தல். “பூண்முலையார் மனமுருக” (பு. வெ. 9: 11, கொளு). 3. மெலிதல். தாயிறந்தபின் உருகிப் போனாள். ம. உருகு.

உருகு- உருக்கு. உருக்குதல் = 1. மாழையிளகச் செய்தல். “தீயிடை யுருக்குதல் முயன்றான்” (கந்தபு. மார்க்க. 131). 2. மன நெகிழச் செய்தல். “எம்பிரா னாமஞ் சொல்லி யுருக்கினன்” (கம்பரா. உருக்காட். 27). 3. மெலியச் செய்தல். அவனை நோய் உருக்கிவிட்டது. 4. அழித்தல். 5. வருத்துதல். ம. உருக்கு.

உருக்கு = 1. எஃகு (சூடா.). 2. உருக்கின பொருள். "செப்புருக் கனைய” (கம்பரா. கார்கா. 91).

ம. உருக்கு, க. உர்க்கு, தெ. உக்கு.

உருக்கு - உருக்கம் = 1. மனநெகிழ்ச்சி, இளக்கம். 2. இரக்கம். ‘உருக்கமி லவ்வசுரக் குலம்” (இரகு. மாலையி. 113). 3. தெய்வப் பத்தி. ருக்கத்திற் கரத்தேந்தி” (விநாயகபு. 75 : 121). ம. உருக்கம்.

உருக்கு- - உருக்கன் = மேனியை வாட்டும் நோய் (யாழ்ப்).

உல் உள் - ஒள் = 1. ஒளியுள்ள. 2. அழகான. 3. நல்ல. 4. அறிவுள்ள.

ஒண்மை = 1. விளக்கம். “ஒப்பின் மாநக ரொண்மை” (சீவக. 535). 2.இயற்கை யழகு. “ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும்” (பெருங். உஞ்சைக். 31 : 151). 3. நன்மை (பிங்.). 4. நல்லறிவு. “ஒண்மை யுடையம்யாம்” (குறள். 844). 5. மிகுதி (திவா.). 6. ஒழுங்கு (சூடா.).

ஒள்- ஒள்ளியன் = 1. அறிவுடையோன். “ஒளியார் முன் ஒள்ளிய ராதல்” (குறள். 714). 2. நல்லவன். “நடக்கையில் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல்” (பழ. 255). க. ஒள்ளித.

ஒள்- ஒளி = 1. நெருப்பு. 2. எரிக்குந்தன்மை. 3. விளக்கு. 4. காந்தி. 5. கதிரவன். 6. வெயில். 7. திங்கள். 8. நாண்மீன். 9. மின்னல். 10. கட்புலன். 11. கண்மணி. 12. பெருமை. 13. புகழ். 14. அரசனது கடவுட் டன்மை. 15. அறிவு. 16. நன்மை. 17. செயற்கை யழகு.

ம. ஒளி, க. ஒள.

ஒளி - ஒளிர். ஒளிர்தல் = விளங்குதல். “உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே” (திருவாச. 37 : 5). 37: