உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்புரை மாலை

127

ஆங்கிலத்தில் எழுவாய், கிழமை (possessive), செய்பொருள் (objective) என மூவேற்றுமையும்; செருமானியத்தில் எழுவாய், செய் பொருள் (accusative) கிழமை (genitive) கொடை என நால்வேற்றுமை யும்; இலத்தீனில் எழுவாய், விளி, செய்பொருள் (accusative) கிழமை (genitive) கொடை என ஐவேற்றுமையும்; கிரேக்கத்தில் எழுவாய், கிழமை (genitive) கொடை, செய்பொருள் (accusative)

விளி, நீக்கம் என அறுவேற்றுமையுமே இருப்பதாக; அவ்வம்மொழி இலக்கண நூல்கள் கூறுகின்றன. இங்ஙனமிருப்பவும், அம்மொழிகட்கின மான வேத மொழியும் சமற்கிருதமுமாகிய கீழையாரியத்தில் மட்டும் தமிழ்த் தொடர்பின்றி எட்டு வேற்றுமைகள் எங்ஙனந் தோன்றியிருக்க முடியும்?

இனி, தமிழில் எத்தனை உருபோ அத்தனை வேற்றுமை என்றும், தமிழிலக்கணியர் வேற்றுமையமைப்பில் சமற்கிருதத்தைப் பின்பற்றிய

தால் பல வேற்றுமைகளை ஒரு வேற்றுமைக்குட் செறித்துள்ளனர்

என்றும், கால்டுவெலார் கூறியிருப்பது, இடப் பொருளுருபுகளின் பன்மை பற்றியோ பல்வேறு வேற்றுமை குறித்து வரும் சொல்லுருபு பற்றியோ, அறிகிலம். 3ஆம் வேற்றுமையினின்று உடனிகழ்ச்சியைப் பிரித்துவிடினும், வேற்றுமை மொத்தம் ஒன்பதேயாகும். வேற்றுமையென் பது பொருள்பற்றியதே யன்றி உருபுபற்றியதன்று. தமிழ் தானே தோன்றிய இயல்பு மொழியாதலின், அதில் ஒவ்வொரு வேற்றுமையையும் பெரும் பாலும் பொருள்தரும் பல சொற்கள் உணர்த்துகின்றன. ஆரிய மொழிகளோ திரிபு மொழிகளாதலின், அவற்றுள் ஒவ்வொரு வேற்றுமை யையும் பொருள்மறைந்த ஒரே உருபு உணர்த்துகின்றது. தமிழர் வேற்று நாட்டினின்று வந்தவரென்றும், நாகரிகத்தில் ஆரியரினும் தாழ்ந்தவரென் றும் இரு தவறான கருத்துகள் கால்டுவெலார் உள்ளத்தில் குடிகொண்டி ருந்தமையே, அவர் தமிழைப் பிறழ வுணர்ந்ததற்குக் கரணியமாம்.

சொல்லை

வேற்றுமை வடிவைக் குறிக்கும் உருபு என்னும் என்னும் சொல் நோக்கினும், அது தூய தமிழே. உருத்தல் =தோன்றுதல். உரு=தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உரு-உருவு-உருபு. ஒ.நோ: அளவு-அளபு. உருவு-உருவம்-ரூப (வட சொல்).

வேற்றுமை மயக்கம் என்பது, உருபு மயக்கம், பொருள் மயக்கம் என இரு வகைப்படும். இவ் வேறுபாட்டைப் புலவர் அருணாசலனார் எடுத்துக்காட்டி யிருப்பது பாராட்டத்தக்கது.

செய்வினை, செயப்பாட்டுவினை

செயப்பாட்டுவினையும்

தமிழிற் செய்வினை போன்றே செயப்பாட் உண்டென்பது, வழக்கினாலும்,

"வினையே செய்வது செயப்படு பொருளே"

ஆயெட்டென்ப தொழின் முத னிலையே"

(596)

7