மதிப்புரை மாலை
139
இத்தகைய வழக்கு இற்றைத் தமிழநாடாகிய சோழ பாண்டிய ய நாடுகளி லில்லாவிடினும், பழஞ் சேரநாடாகிய மலையாள மலையாள நாட்டி ல் ன்றுமுள்ளது. 'பனியத்துப் போகருதெ', 'மழையத்துப் போகருதெ', வெயிலத்துப் போகருதெ' என்பன போன்ற வழக்குகள் அங்கு இன்னும் இயல்பாகவுள்ளன.
('போகருதெ' என்பது 'போகா தே என்னும்
எதிர்மறை யேவலின் மறுவடிவம்.)
இதுவரை, இவ் வழக்கு மலையாள நாட்டிற்கே சிறப்பெனக் கருதியிருந்தோம். ஆயின், திரு. மு. கணபதிப்பிள்ளை அவர்கள்
இது யாழ்ப்பாணத்திலு முள்ளதெனத் தெரிவிக்கின்றார்கள்.
"
'பண்டு தொட்டுத் தூய தமிழ் வழங்கும் இலங்கையின் வடபாகத் திலே சிறப்பாக யாழ்ப்பாணப் பகுதியிலே இவ் வழக்கு உள்ளது. நோயினாற் பீடிக்கப் பட்டவர்களையோ குழந்தைகளையோ வெயிலிலும் மழையிலும் போகாது தடுப்பவர்கள் இவ் வழக்கினைக் கையாளுதல் உண்டு. வெயிலத்துப் போகக் கூடாது. மழையத்துப் போகக்கூடாது எனக் கூறுவது யாழ்ப்பாணத் தமிழர் காதுக்கும் அந்நியமாகத் தோன்றவில்லை." (பக். 47) என்பது அவர்கள் கூற்று.
க
இனி, ஆசிரியர் 'மூ', 'எழு' என்னும் எண்ணுப் பெயரெச்சங்களை நாட்டுப் பெயராகக் கொள்ளும் புதுக் கருத்து, கருத்து வேறுபாட்டிற் கிடமானது.
இந் நூலின் பொதுப் போக்கு. உணர்ச்சியற்றுத் தூங்கிக் கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பி,
என
ஆரிய
ரிய வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம் முதல் டன்னிய
குருவுமாய்த்
குருவுமாய்த் தமிழினில் உணர்த்தவிட் மின்மையின் அரசினை யுறுமே
அறிவித்து ஆற்றுப்படுத்துவதா யுள்ளது. ஆதலின், தமிழர் யாவரும் இதனை வாங்கிப் படித்துப் பயன் பெறுக.
தமிழ் நூல்
(த.
ச. தமிழன்)
1966
திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகத்தின் தமிழாசிரியர் புலவர் த. சரவணத் தமிழனார் இயற்றிய பொதுமுறைத் தமிழிலக்கண
பார்வையிட்டேன்.
நூலைப்
ஆசிரியர் நூலை எழுத்தியல், சொல்லியல், உறுப்பியல், புணரியல், பொதுவியல், ஒழிபியல், தொடரியல் என ஏழியல்களாகப் பகுத்து, இக் கால மாணவர் தமிழைப் பிழையறப் பேசுதற்கும், எழுதுதற்கும் இன்றிய மையாத இலக்கணங் களையெல்லாம் 433 நூற்பாவாலும் அவற்றின் உரையாலும் விளக்கி யிருக்கின்றார்.