உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

பாவாணர் உரைகள்

வேளாளரே, இல்வாழ்க்கையருட் சிறந்தவராகத் திருவள்ளுவராற் கொள்ளப்பெற்றனர் என்பது தெளிவாம். குடி (வீடு, குடியிருத்தல், குடியானவன் (உழவன்) குடிகள் என்னும் தொடர்புடைய சொற்களும், வேளாளனின் சிறப்பை ஓரளவு உணர்த்தும்.

ஆகவே,

"

"இவ்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை’

JJ

(குறள். 41)

இல்லறத்தோடு கூடி வாழ்வதற்குச் சிறந்தவன் என்று சொல்லப்பெறும் வேளாளன், தன்னைப்போன்றே இல்வாழும் இயல்புடைய பார்ப்பான், அரசன், வணிகன் என்னும் ஏனை மூவர்க்கும், அவர்செல்லும் நல்லற நெறிக் கண் நிலைபெற்ற துணையாம். என்று பொருள் கூறுவதே பொருத்தமாம். ழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்."

என்னும் குறளும் ஈண்டு நினைக்கத் தகும்.

(குறள். 1033)

பார்ப்பான் நூல்களை அல்லது கோயில் வினைகளைப் பார்ப்பவன். ஆகவே, ஆசிரியனும் பூசாரியுமான இல்லறத்தார் பார்ப்பார் என்பதாயிற்று. அந்தணன், பார்ப்பான் என்னும் இரண்டும் தூய தமிழ்ச்சொற்கள். இவை, பிராமணர்வருமுன், துறவியரும் இல்வாழ்வினருமான தூய தமிழரையே குறித்தன; பின்னர்ப் பிராமணர்க்கே வரையறுக்கப்பட்டுவிட்டன. இன்றும், உவச்சர், நம்பி, பண்டாரம், புலவர், போற்றி என ஆங்காங்கிருக்கும் பூசாரி யரும், ஆசிரியருமான தமிழரெல்லாம் பார்ப்பாரே. பட்டினத் தடிகளும் தாயுமானவரும் போலத் துறவுபூண்ட தமிழரெல்லாம் அந்தணரே. பார்ப்பான் அல்லது பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபென்றும், அந்தணன் என்பதற்கு ஒத்த பொருட்சொல்லான ஐயன் என்பது ஆரியன் என்பதன் திரிபென்றும் கூறுவதெல்லாம் தமிழரின் பேதைமையை அடிப்படையாகக் கொண்ட ஆரியக் குறும்பேயன்றி வேறன்று.

- (1956-ஆம் ஆண்டு, மே, 2ஆம் நாள் தென்காசித் திருவள்ளுவர்

கழக ஆண்டு விழாவில் ஆற்றிய

தலைமைப் பேருரைச் சுருக்கம்.) தென்மொழி