உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறுப்புரை மாண்பு


96

மறுப்புரை மாண்பு லேயே அத் தொடர்பு ஏற்பட்டதென்றும் கூறுவதும் வரலாற்றொடு முற்றும் முரண்பட்டதாகும்.

ஒரு காலத்தில் இந்தியா முழுதும் தமிழரே பரவியிருந்தனர். வடக்கே செல்லச் செல்ல மொழியும் நாளடைவில் மெல்ல மெல்லத் திரிந்தது. அதனால், வடநாடுகளைப் பிற்காலத்தில் 'மொழிபெயர் தேயம்' என்றனர். "மொழிபெயர் பன்மலை யிறப்பினும்

99

ஒழிதல் செல்லா தொண்டொடி குணனே. "மொழிபெயர் தேஎந் தருமார் மன்னர் கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன.

66

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும்.

""

(ஐங். 321)

99

(அகம். 67)

(குறுந். 11)

மொழிமாறு தேயம் என்னாது மொழிபெயர் தேயம் என்றதை நோக்குக. பெயர்தல் = ஒரே மொழி மெல்ல மெல்லத் திரிதல்.

குமரிமலையும் பஃறுளியாறும் மூழ்கியபின், அவற்றுக் கீடாகப் பாண்டியன் பனிமலையையும் கங்கையாற்றையுங் காண்டான். அடியார்க்குநல்லார் சிறப்புக் குறிப்பைப் பார்க்க (சிலப். 11:17-22).

குமரிநாட்டுச் சிவநெறியார் அணிந்து வந்ததும் நேபாள நாட்டுச்

சிவமணியே (உருத்திராக்கமே).

வங்க நாடு சென்று வாழ்ந்த தமிழ வணிகரே, காளிகோயில் சமைத்துக் காளிக்கோட்டம் என்று நகர்ப்பெயரிட்டனர். அஃது இன்று கல்கத்தா என்று ஆங்கிலத்தில் திரிந்து வழங்குகின்றது. தமிழகம் (Tamluk) என்றொரு நகரும் அந் நாட்டில் தோன்றிற்று. நிலவாணிகமும் நீர் வாணிகமும் வடநாடுகளொடு தொடர்ந்து நிகழ்ந்துவந்தன.

வடநாட்டார் குமரியாடவும் தென்னாட்டார் கங்கையாடவும் வந்து செல்வது, தொன்றுதொட்ட வழக்கமா யிருந்துவந்தது. பாரதக் காலத்தில் அர்ச்சுனனும் குமரியாட வந்து பாண்டியன் குமரியை மணந்தான்.

வேத ஆரியருள் முதன் முதலாக விந்தியமலை தாண்டித் தென்னாடு வந்த ஆரிய முனிவர் அகத்தியர், அதனால் விந்தமலையின் செரு க் கடக்கியவர் எனச் சிறப்பிக்கப்பட்டார். அவருக்குப் பின் வந்தவர் நாரதர். பின்னர்த் தக்கணபதம் என்னும் ஒழுங்கான பாதையை அமைத்துக் கொண்டனர் ஆரியர்.

இயற்கையையும் ஐம்பூதங்களையும் இருசுடரையும் ஆவிகளையும் சோமச்சாறான கள்ளையுமே வணங்கிவந்த வேத ஆரியர், தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, காளி வணக்கத்தையும் குமர வணக்கத் தையும் சிவதிருமால் மதங்களையும் மேற்கொண்டனர். அதன்பின் பதினெண் புராணங்களும் இதிகாசங்களும் உபநிடதங்களும் ஆகமங்