60
பாவாணர் நோக்கில் பெருமக்கள்
ce
சாற்றிய பல்கலையுந் தப்பா அருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாம் - தோற்றவே முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பார் எப்பா வலரினு மில்.”
ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர் உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.'
ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
JJ
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது தந்தா னுலகிற்குத் தான்வன் ளுவனாகி அந்தா மரைமே லயன்.
எப்பொருளும் யாரும் இயல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செய்பவரும் முப்பாற்குப் பார தஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்.”
ஏதமில் வள்ளுவர் இன்குறள்வெண் பாவினால் ஓதிய ஒண்பொரு ளெல்லாம் - உரைத்ததனால் தாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த வேதமே மேதக் கன.”
'இன்பம் பொருளறம் வீடென்னும் இந்நான்கும்
முன்பறியச் சொன்ன முதுமொழிநூல்
குள்ள அரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.
மன்பதைகட்
"வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழா லுரைசெய்தார்
-
ஆதலால்
உள்ளுந ருள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.”
ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும் முதனான்குஞ் சாலும் அருமறைகள் ஐந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள்.”
சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா."