உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத் தெள்ளுத லன்றே செயற்பால ல வள்ளுவனார் முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார் எப்பா வலரினு மில்”

என்று முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பெயரிலும்,

அறநான் கறிபொரு ளேழொன்று காமத்

திறமூன் றெனப்பகுதி செய்து - பெறலரிய நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார் போலு மொழிந்த பொருள்”

என்று தொடித்தலை விழுத்தண்டினார் பெயரிலும்,

“எல்லாப் பொருளும் இதன்பா லுளவிதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லாற் பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்

சுரந்தபா வையத் துணை”

என்று மதுரைத் தமிழ்நாகனார் பெயரிலும்,

"

அறமுதல் நான்கும் அகலிடத்தோ ரெல்லாம்

திறமுறத் தேர்ந்து தெளியக்

-

குறள்வெண்பாப்

பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே முன்னை முதுவோர் மொழி”

என்று கோவூர்கிழார் பெயரிலும்,

இம்மை மறுமை யிரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியில் தெளிவுபெற - மும்மையின் வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார் பாடின ரின்குறள்வெண் பா”

என்று இழிகட் பெருங்கண்ணனார் பெயரிலும்,

..

உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள

தள்ளற் கரியவிருள் தள்ளுதலால் -வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்குமெனக் கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு'

என்று குலபதி நாயனார் பெயரிலும்,

"பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்

தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்

வையத்து வாழ்வார் மனத்து"

என்று தேனீக்குடிக் கீரனார் பெயரிலும்,