உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

அ + காலம் = அக்காலம்

அ + மனிதன் = அம்மனிதன்

வல்லினமெய்

மெல்லினமெய்

19

இங்ஙனமே பிறவும்.

உயிர்மெய்யில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஈரெழுத்திருத்தலால், உயிர்மெய்ம் முதலெல்லாம் மெய்ம்முதலென்றும் உயிர்மெய் யீறெல்லாம் உயிரீறென்றும் தெரிந்துகொள்க.

அது என்னுஞ் சொல் தனித்துவரினும் சொல்லீறாய் வரினும் ஏகாரத்தொடு புணரும்போது உகரங்கெட்டும் கெடாதும் இருவகையாய்ப் புணரும்.

உ-ம்: அதே, அதுவே; அழைப்பதே, அழைப்பதுவே.

எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணர்தல்

எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணரும்போது, ஒன்று என்பது உயிர்க்குமுன் ஓர் என்றும், மெய்க்கு முன் ஒரு என்றும் திரியும்.

திரியும்.

உ-ம்: ஓர் ஊர், ஒரு மனிதன்.

இக்காலை ஓர் என்பது மெய்ம்முன்னும் வைத்தெழுதப்படுகின்றது. உ-ம்: ஓர் மரம்.

இரண்டு என்பது உயிர்க்கு முன் ஈர் என்றும், மெய்க்கு முன் இரு என்றும்

உ-ம்: ஈர் ஆயிரம், இரு திணை

மூன்று என்பது உயிர்க்கு முன்னும் இடையினமெய்க்கு முன்னும் மூ என்றும், பிறமெய்கட்கு முன் மு என்றும் திரியும்.

உ-ம்: மூவுலகு, மூவேந்தர் முக்காலம், மும்மழை

நான்கு என்பது நால் என்று திரியும்.

உ-ம்: நாலாள், நாற்பொருள்

ஐந்து என்பது ஐ என்று திரியும்.

உ-ம். ஐயாயிரம், ஐம்பூதம், ஐந்நூறு

ஆறு என்பது உயிர்க்குமுன் இயல்பாயிருக்கும்; மெய்க்கு முன் குறுகும். உ-ம்: ஆறாயிரம், அறுகால்

ஏழு என்பது உயிர்க்குமுன் ஏழ் என்றும், மெய்க்கு முன் எழு என்றும் திரியும்.

உ-ம்: ஏழுலகு, எழுபிறவி

எட்டு என்பது எண் என்று திரியும்.

உ-ம்: எண்ணாயிரம், எண்குணம்.

இரண்டுமுதல் எட்டுவரையுள்ள எண்ணுப்பெயர்கள் இரண்டுபேர், மூன்றுநாள் எனத் திரியாதும் பெயரைத் தழுவும். ஆயினும், அது அத்துணைச் சிறப்பின்று.